Friday, October 24, 2014

முஹர்றம் பத்தாம் நாள் ஆசூறா தினம் அதிவிசேடங்களை உள்ளடக்கிய                                                                               மாதினமாகும்
  • அன்றுதான் நபீ ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் மன்னித்தான்
  • அன்றுதான் நபீ நூஹ் (அலை) அவர்களுடைய கப்பல் தூபான் வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றப்பட்டு ஜூதி மலையில் தரை தட்டியது.
  • அன்றுதான் நபீ மூஸா (அலை) நபீ ஈஸா (அலை) பிறந்தார்கள்.
  • அன்றுதான் சர்வாதிகாரி நும்றூதால் நெருப்புக்கிடங்கில் எரியப்பட்ட நபீ (இப்றாஹிம்) அலை காப்பாற்றப்பட்டார்கள்
  • அன்றுதான் நபீ யூனுஸ் (அலை) அவர்களின் சமூகத்தை விட்டு வேதனை நீக்கப்பட்டது.
  • அன்றுதான் நபீ ஐயூப் (அலை) அவர்களின் துன்பம் நீங்கியது.
  • அன்றுதான் நபீ யஃகூப் (அலை) அவர்கள் தனது மகன் யூசுப் (அலை) அவர்களை இழந்ததால் தேய்ந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.
  • அன்று பாழ்கிணற்றில் எறியப்பட்ட நபீ யூசுப் ( அலை) அதிலிருந்து வெ ளியேற்றப்பட்டார்கள்.
  • அன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பமாக்கப்பட்டது.
  • அன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்தது.
  • அன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியில் உள்ளவர்களுக்கு இறங்கியது
  • தூபான் வெள்ளத்தின் பின் பூமியில் முதன் முதலாக சமையல் செய்யப்பட்டது. இதை நூஹ் நபீ அவர்களே செய்தார்கள்.
  • அன்றுதான் சுலைமான் நபீ அவர்களுக்கு முழு உலக ஆட்சியும் வழங்கப்பட்டது.
  • அன்றுதான் நபீ ஸக்கரிய்யா (அலை) அவர்களுக்கு நபீ யஹ்யா (அலை) அவர்கள் பிறந்தார்கள்.
  • அன்றுதான் பிர்அவ்னும் அவனதும் சூனியக்காரர்களும் தோற்கடிக்கப்பட்டனர்.
  • அன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான்
  • அன்றுதான் நபீ பேரர் ஹுசைன் (றழி) அஹ்லுல்பைத் என்றழைக்கப் படுவோரில் அநேகரும் கொலை செய்யப்பட்டனர்.
ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு) 

ஆஷீரா நோன்பு (ஆஷூரா பிறை 9 மற்றும் 10)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷீரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் நீங்கள் நோன்பு நோற்கும் இந்நாளின் சிறப்பு என்ன ? என்று கேடட்டார்கள். அதற்கு யூதர்கள் , இது ஒரு புனிதமான நாள், இன்று தான் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவரது சமூகத்தினரையும் (அவர்களது) விரோதிகளான ஃபிர்அவ்ன், அவனது கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றி அவனையும் அவனது கூட்டத்தினரையும் நீரில் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நாங்கள் நோன்பு வைக்கின்றோம் என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், மூஸா (அலை) அவர்களுக்கு உங்களை விட நானே அதிக உரிமையும், தகுதியும் உடையவன் என்று கூறி விட்டுத் தாமும் நோன்பு நோற்று, பிறரையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

ஆஷீரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது , அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் மறுவருடம் இந்த தினத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். (முஸ்லிம்)

அபூகதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: '' நபி(ஸல்) அவர்களிடம் ஆஷீரா நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், '' கடந்த ஒரு வருட பாவங்களுக்கு அது பரிகாரமாகும்'' என்று கூறினார்கள். (முஸ்லிம்)

ஆக முஹர்ரம் மாதம் ஒன்பது மற்றும் பத்தாவது நாட்களில் நோன்பு நோற்பது நபிவழி என அறியலாம்.
அல்லாஹ்வுக்குவிருப்பமானது

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம். முஹர்ரம் என்பதன் பொருள் புனிதமானது என்பதாகும். இதனை அல்லாஹ்வின் மாதம் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டது இதன் மகத்துவத்துக்கு இன்னுமொரு சான்றாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரழி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
'' ரமளானுக்குப் பின் நோற்கும் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் '' ( முஸ்லிம், அஹ்மத்)

பத்தாம் நாளோடு சேர்த்து ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
1. அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாம் நாளையும் நோற்பேன் என்றார்கள். (முஸ்லிம்)
2. ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோக்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)
3. ஆஷுரா நாளின் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒருநாள் அல்லது அதற்கு பின் ஒருநாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறும் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்னறார்கள். (அஹ்மத், இப்னு குஸைமா, பைஹகி)
அல்லாஹ் மிக நன்கறிந்தவன்.

Thursday, October 23, 2014

முஹர்ரம் மாதமும் அது தரும் பாடமும்.




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..


முஹர்ரம் மாதமும் அது தரும் பாடமும்.

அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை ஆகும். ( அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும். அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும்” (ஆதாரம்: புகாரி)

மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள், புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை:

1) துல் கஃதா, 2) துல் ஹிஜ்ஜா, 3) முஹர்ரம், 4) ரஜப்

எனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது. ஹுரும் என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன.

அல்லாஹ் புனிதமாக்கிய மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும். அதனை நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளார்கள். அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் பேணுவது நம் கடமையாகும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான் ''அதில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் '' (9:36).

புனிதம் மிக்க மஸ்ஜிதுல் ஹராமில் குற்றமிழைப்பது எவ்வளவு குற்றமோ அது போன்றே புனிதம் மிக்க மாதங்களில் தவறிழைப்பதும் பெரும் குற்றமாகும். எனவே மற்ற மாதங்களைக் காட்டிலும் அதிகமாகப் புனிதம் மிக்க மாதங்களைப் பேணுதல் அவசியம் ஆகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்" (ஆதாரம்: முஸ்லிம்)

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு:

இம்முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம் என எம்பெருமானார் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட சிறப்புமிகு மாதம் ஆகும்.
முஹர்ரம் மாதத்திற்கென்று பல்வேறு தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் தலையாயவை இரண்டாகும்.
இம்மாதம் இஸ்லாமிய வருடப்பிறப்பின் ஆரம்ப மாதமாகும்.
இம்மாதத்தின் 10ஆம் நாள் இறைத்தூதரான மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் சத்திய அழைப்பிற்கு செவிசாய்த்து, ஏகஇறைவன்மீது நம்பிக்கைக் கொண்ட சமூகத்தினரையும் (பனூ இஸ்ரவேலர்), அவர்களை அழித்தொழிக்கப் புறப்பட்ட ஃபிர்அவ்னிடமிருந்து வல்ல இறைவன் பாதுகாத்த நாளாகும்.
"ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.

மேற்கண்ட ஹதீஸில் இம்மாதத்தை அல்லாஹ்வின் மாதமாக நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் குறிப்பிடுகின்றார்கள். மட்டுமல்ல, முஹர்ரம் மாதம் 9 (தாசுஆ) மற்றும் 10 (ஆஷுரா) ஆகிய இரு தினங்களில் அனுசரிக்கப்படும் நோன்புகள் ரமலான் மாத நோன்புகளுக்கு அடுத்தபடியான சிறந்த நோன்புகளாக நபி (ஸல்) அவர்களால் இங்கு அடையாளப் படுத்தப்படுகிறது.

ஆஷூரா நோன்பைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு), "சென்ற வருடத்தின் பாவங்களுக்கு (அது)பரிகாரமாக அமையும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம்.

ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக விளங்கும் இந்த ஆஷூரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் 10ஆம் நாள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.


"மூஸா (அலை) அவர்களைப் பெருமைப் படுத்துவதற்கு யூதர்களைவிட நான் அதிகத் தகுதி வாய்ந்தவன்" எனக் கூறி அவ்வருடம் முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்ற நபி(ஸல்) அவர்கள், "எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" (அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.) எனக் கூறிச்சென்றார்கள்.

முஹர்ரம் மாதத்தின் படிப்பினை:

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்து முஹர்ரம் 10 அன்று மட்டும் நோன்பு வைத்திருந்தாலும் அவர்களின் எண்ணத்திற்கியைந்து 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பு வைக்கும் முஸ்லிம் சமூகம் அதன் பின்னணியில் உள்ள நபி(ஸல்) அவர்களின் உறுதியான சமுதாய சிந்தனையைக் குறித்து ஆழமாகச் சிந்திப்பதில்லை.

நபி(ஸல்) அவர்கள், "அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் 9 அன்றும் நோன்பு வைப்பேன்" என்று ஏன் கூறினார்கள்?

அதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் விரவிக் கிடக்கும் பல்வேறு நிகழ்வுகள் தெளிவான பதிலைத் தருகின்றன.

யூத சமுதாயம் என்பது, உலகில் பல சமூகங்களை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் எண்ணிக்கையை வைத்து மிகவும் அதிகமான நபிமார்களைப் பெற்றுக் கொண்ட சமுதாயமாகும். எனினும் தங்களுக்கு அனுப்பப்பட்ட பல நபிகளை நிராகரித்தது மட்டுமன்றி அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிகளுள் அதிமானோரைக் கொடூரமாகக் கொலையும் செய்தவர்கள் யூதர்களாவர். இதனால் இறைவனின் கடும் சினத்திற்குரியவர்களாகி இறைவனால் சபிக்கப்பட்ட கூட்டமாக, இறைவனின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கூட்டமாக அவர்கள் இருக்கின்றனர்.

இந்தக் காரணத்தினால் எப்பொழுதுமே தம்முடைய செயல்களில் எதுவும் யூதர்களுக்கு ஒப்பாக எவ்விஷயத்திலும் இருந்து விடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர்.

அதோடு தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும்படி வலியுறுத்தவும் செய்தனர். இதற்கு உதாரணமாகப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

அவற்றில் ஒன்றுதான் இந்த ஆஷூரா 9ஆம் நாள் நோன்பும். எவ்விஷயத்திலும் யூதர்களின் செயலுக்கு, தான் ஒப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நபி(ஸல்) அவர்கள் நன்மைகள் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் அவர்களைவிட மேலதிகமாக இருக்கும் முகமாக ஆஷூரா 9 அன்றும் நோன்பு வைக்க விழைந்தார்கள்.

இவ்வாறு தமது ஒவ்வொரு அசைவிலும் மாற்றாரின் கலாச்சாரத்தைப் பின்பற்றிவிடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் கவனமாக இருந்ததன் காரணம், இஸ்லாமியக் கலாச்சாரம் எவ்விதத்திலும் மற்ற கலாச்சாரங்களோடு ஒன்றி அழிந்து விடக்கூடாது; தனித்தன்மையும் திகழ வேண்டும் என்று கருதியேயாகும்.

ஆஷூராவின் சிறப்பு. 
“நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது “மூஸா(அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரி(பிர்அவ்ன்) இடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும்” என்று யூதர்கள் காரணம் கூறினர். “உங்களை விட மூஸா(அலை) அவர்களுக்கு நான்தான் அதிக உரிமை உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி, அன்று நோன்பு வைக்குமாறும் உத்தரவிட்டனர். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: புகாரி 3397, முஸ்லிம்.

இந்தக் கட்டளை மூலம் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்று தெரிந்திருந்தாலும் ஆஷுரா நோன்புக் கட்டாயக் கடமை அல்ல. காரணம் நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது – ரமழான் நோன்பு கடமையாக்கப்படாத நேரத்தில் – இந்த நோன்பைக் கடமையாக ஆக்கி இருந்தனர். ரமழான் நோன்புக் கடமையாக்கப்பட்டபின் ஆஷுரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை.
“நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டிருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின், “விரும்பியவர் இந்த ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும்! விரும்பாதவர் விட்டு விடலாம்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: புகாரி 1592, முஸ்லிம். இதே கருத்தை முஆவியா(ரழி) அவர்களும் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

“ஆஷுரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர்” என்று நபி(ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது, “அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: முஸ்லிம் 1916, 1917, அஹ்மத், அபூதாவூது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. நூல்: புகாரி 2006

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1976

நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977

மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளும், பத்தாம் நாளும், நோன்பு ஸுன்னத் என்பதை நாம் உணரலாம். இதுதான் ஆஷுரா நாளின் சிறப்பு.
கர்பலா

இற்றைக்கு1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சோக நிகழ்வு அது. நீதியும் அநீதியும் சத்தியமும் அசத்தியமும் மோதிக் கொண்ட நாள் அது.
மனச்சாட்சிகளை உருகவைக்கும் அந்த நிகழ்வுதான் கர்பலா நிகழ்வு. ஹிஜ்ரி 61ம் ஆண்டு அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பேரர் இமாம் ஹூசைன்(ரலி) அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பனீ உமையா கூட்டத்தினரால் கர்பலா எனும் பாலைவனத்தில் மிகபரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
நபியவர்களினதும், தோழர்களினதும் அளப்பெரிய தியாகங்களுக்கும் அயராத உழைப்பிற்கு மத்தியில்; வளர்த்தெடுக்கப்பட்ட புனித இஸ்லாம், உமையாக்களினால் மாசுபடுத்தப்பட்டது.
குர்ஆனின்; விளக்கங்களும் நபியவர்களின் சுன்னாவும் அக்கொடியவர்களின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் சாதகமாக வியாக்கியானம் செய்யப்பட்டன.
அநீதிகளும் அனாச்சாரங்களும் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றப்பட்டன. இஸ்லாமிய நல்லொழுக்கங்களும் அதன் பெருமான விழுமியங்களும் சிதைக்கப்பட்டு சீரழிக்கப்பட்டன. நபியவர்களின் மார்க்கம் அழிக்கப்படும் அந்த அபாயகர நிலையை கண்டு அதனைப்பாதுகாக்கும் முழுநோக்குடன் இமாம் ஹூசைன்(ரலி) அவர்கள் கர்பலா நோக்கி புறப்பட்டார்கள். அவர்கள் தனது பயனத்தின் நோக்கம் பற்றிக் கூறுகையில் “நான் சமூகத்தில் குளப்பத்தை ஏற்படுத்த இப்பயனத்தை மேற்கொள்ள வில்லை. எனது பாட்டனாரினது மார்க்கத்தில் சீர்திருத்தத்தை மேற்கொண்டு நன்மையை ஏவி தீமையைத்தடுக்கவே இதனை செய்கிறேன்” எனக் கூறினார்கள். நபியவர்களின் மார்க்கம் யஸீதினால் குளிதோன்றி புதைக்கப்படுவதை சகித்துக் கொள்ளாத இமாம் ஹூசைன் அவர்கள் தனது குடும்பத்தாருடனும் தனது போராட்டத்திற்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்த வாக்கு மீறாத தோழர்களுடனும் கர்பலாவுக்கு வருகை தந்து அநியாயக்காரர்களுடன் போராடி தனதுயிரையும் தனது குடும்பம் மற்றும் தோழர்களின் உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையிலே தியாகம் செய்தார்கள்.

நபி(ஸல்) அவர்களின் பேரப்பிள்ளையான ஹுஸைன் (ரலி) அவர்களின் மரணம் (கொலை) யஸீத் பின் முஆவியா என்பவரால் நடத்தப்படுகின்றது. யஸீத் பின் முஆவியா தனி மனிதராக நின்று இந்த காரியத்தில் ஈடுபடவில்லை. அந்ந சம்பவம் நடக்கும் போது சம்பவம் நடந்த கர்பலா பகுதியில் யஸீத் பின் முஆவியா என்பவரே ஆளுனராக இருந்தார். அவருடைய ஆளுமைப் பகுதிகளுக்கு எதிராகவும் அவரது அதிகாரத்துக்கு எதிராகவும் நடந்தேறிய குழப்பங்களிலேயே ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்படுகிறார்கள். (முஹர்ரம் மாதம் 10 நாள் இந்த சம்பவம் நடக்கின்றது)

நபி (ஸல்) அவர்களின் அன்புக்கும் அளவுகடந்த நேசத்துக்கும் உரிய பேரரான இமாம் ஹுஸைன் (அலை) அவர்களும், பெண்கள் சிறுவர்கள் அடங்கிய அவர்களது உறவினர்களும் உமையா ஆட்சியாளனான யசீதினால் கர்பலாத் திடலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, ஈட்டி முனையில் சிரசுகள் குத்தி உயர்த்தப்பட்டு ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோரமான நிகழ்வை எதிர்கொண்ட கசப்பான அனுபவம் இந்த முஹர்ரம் மாதத்துக்கு உண்டு.

வரலாற்றிலே ஒரு திருப்புமுனையாக அமைந்து, குறிப்பிட்டதொரு சகாப்தத்தையே உருவாக்கிய கர்பலா நிகழ்வில் பின்னிப் பிணைந்து காணப்படும் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் வாழ்க்கைத் தடங்கள் மிகுந்த அனுதாபத்திற்குரியனவாகும்.

இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், சிறந்த சிந்தனையுடையோராயும் துணிச்சல் மிக்கோராயும் துன்பங்களையும் ஆபத்துகளையும் எதிர்நோக்கும் வல்லமை பெற்றோராயும் விளங்கினார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உயிரையே இழக்க நேரிட்டாலும் அசைக்க முடியாத மனவுறுதியோடு எதையும் தாங்கும் மனத்திண்மை படைத்தோராய்த் திகழ்ந்தார்கள். இஸ்லாமியக் கொள்கைகளை, கோட்பாடுகளைக் காப்பாற்றிக் கொள்வதிலே அன்னார் காட்டிய வீரமும் மனவுறுதியும் சரியான தீர்மானங்களும் சிலாகிக்கத்தக்கவை.

வெறும் அரசியல் நோக்கிற்காக அல்லாமல், தூர்ந்து செல்லும் இஸ்லாமியத்தைப் பாதுகாக்கும் உயர் இலட்சியத்துடன் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், இந்நிகழ்வில் பங்கேற்றார்கள். ஆட்சியாளர்களை சீர்திருத்தம் செய்வதற்கு சமாதான முயற்சியைப் பயன்படுத்த முனைந்தார்கள். ஆனாலும், நிராயுதபாணியாக நின்ற அவர்களை, உமையாக்கள் கொடூரமாகக் கொன்றனர். தமது ஆட்சிக்கு எதிரான, அல்லது தமது ஆட்சியை விரும்பாத சக்திகளைக் களையும் உமையாக்களின் திட்டத்திற்கு இமாம் ஹுஸைனும் பலியாகிப் போனார்கள்.

ஹிஜ்ரத் 
கிபி 622 –ல் முஹ்ம்மது மக்காவிலிருந்து யஸ்ரிப் என்ற மதீனாவிற்கு புலம்பெயர்ந்தார். இதை ஹிஜ்ரத் என்றும், அன்றிலிருந்து புதிய சகாப்தத்துடன், இஸ்லாமியக் காலக்கணக்கு துவங்குவதாக கூறுவதையும் நாம் அறிவோம்.

ஹிஜ்ரத் என நாம் வழமையாக அழைக்கும் வரலாற்று உண்மைகள் முஸ்லிம் பொதுமக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமானவை. இறைதூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் ஒரு சிறு கூட்டத்தினர் மக்காவிலிருந்த தம் வீடுகளை விட்டு மதீனாவுக்குப் புலம் பெயரும் நிர்ப்பந்தத்திற்குட்பட்டனர். அக்கூட்டத்தினர் தம்மிடமிருந்த அனைத்து சொத்துக்களையும் விட்டுசென்றது, ஈமானை மட்டும் அது சுமந்து சென்றது, நபித்துவத்தின் பின்னர் 13 ம் வருடத்தில் இது நிகழ்ந்தது.

இப்பூவுலகில் முதன் முதலாக ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டவர் இறைதூதர் நபி இப்றாஹீம் (அலை) அவர்களே! அன்னார் தமது துணைவியார் ஸாராவுடன் "ஹர்ரான்" என்ற ஊரிலிருந்து "பாலஸ்தீனம்" சென்று அங்கு குடியேறினார்கள். இதுவே இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த முதல் ஹிஜ்ரத் எனக் கருதப்படுகிறது.

தாம் கொண்ட கொள்கையின் அடிப்படையில் அசைக்க முடியாத விசுவாசத்தோடு செயலாற்றுவதை வலியுறுத்தும் இஸ்லாம் எனும் இனிய மார்க்கத்தை காப்பதற்காக அந்த மார்க்கம் போதிக்கும் அறநெறிகளை தம்மில் நிலைநிறுத்தி தாமும் செயற்படுவதோடு, அவற்றைத் தரணியில் தழைக்கச் செய்வதற்காக நாடு துறப்பதையே ஹிஜ்ரத் என்ற பதம் விளக்கி நிற்கிறது.

இவ்வகையில் இறைவனுக்காக இறைதூதர் மீது கொண்டிருந்த தூய அன்பிற்காக இறைவனும் இறைதூதரும் ஈந்தளித்த ‘தீன்’ எனும் சன்மார்க்கத்திற்காக அன்றைய அரபகத்து முஸ்லிம்கள் தாம் பிறந்த புனித மக்கா நகரை மட்டுமல்ல தாம் பெற்ற மக்களை துறந்தார்கள். பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் துறந்தார்கள்.

இறைத்தூதரின் நாடு துறத்தல் என்ற ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டதுதான் முஸ்லிம்கள் பயன்படுத்தி வரும் ஹிஜ்ரி ஆண்டு. இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதுதான் இந்த ஹிஜ்ரத். பெருமானாரின் ஒவ்வொரு அசைவிலும் ஏராளமான பாடங்கள் உள்ளன. அது போல் பெருமானார் செய்த ஹிஜ்ரத்திலும் மனிதர்களுக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன.

இறைத்தூதரின் நாடு துறத்தல் என்ற ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டதுதான் முஸ்லிம்கள் பயன்படுத்தி வரும் ஹிஜ்ரி ஆண்டு. இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதுதான் இந்த ஹிஜ்ரத். பெருமானாரின் ஒவ்வொரு அசைவிலும் ஏராளமான பாடங்கள் உள்ளன. அது போல் பெருமானார் செய்த ஹிஜ்ரத்திலும் மனிதர்களுக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன.

யத்ரிப்(மதீனா)வுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு இறைவனின் கட்டளை வந்ததும் நான் இறைவனின் தூதர் எனவே புறப்படுகிறேன் என்று புறப்பட்டு விடவில்லை. திட்டம் இடாமலோ, தனித்தோ, யாருடைய உதவியையும் நாடாமலும் புறப்பட்டு விடவில்லை. முறையாகவும் செம்மையாகவும் திட்டமிட்டார்கள். மனிதர்களிடமிருந்து தேவையான உதவிகளையும் பெற்றார்கள்.

மனித மனதில் பல காட்சிகளை வரைய மூல ஊற்றாக அமைந்த, அமையும் இந்நிகழ்வு கவலையையும், மனவெழுச்சிகளையும் தூண்டும் பல நிகழ்வுகளாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் தௌர் குகை நிகழ்வு மிகுந்த மனவெழுச்சியைத் தூண்டக் கூடியது என்பதில் சந்தேகமில்லை. சிலந்தி குகை வாயிலில் வலைபின்னுகிறது. புறா அங்கே கூடு கட்டுகிறது. விரட்டுவோரை வழிதவறச் செய்யும் நிகழ்வுகளாக இவை அமைந்து விடுகின்றன. இறுதிமுடிவை தீர்மானிக்கும் அந்தச் சில நிமிடங்களின்போது இறைதூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களுக்கு அப்பிரமிக்கச் செய்யும் ஆச்சரியமான வார்த்தைகளைக் கூறுகிறார்:


நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் ஓர் திருப்பு முனையாக அமைந்துள்ளது போன்று, அவர்களின் வாழ்க்கை முறையும் மனித சமுதாயத்திற்கு ஒரு வழி காட்டலாக அமைந்திருப்பதை நாம் அறிந்திருந்தும் நமது வாழ்வை இஸ்லாமிய நெறிகளின் பால் செலுத்தி சீர்படும் எண்ணத்துடன் அதை வரவேற்பதில் தான் உண்மையான புத்தாண்டின் மகிழ்வு அமைந்திருக்கிறது. வல்ல நாயன் நல்லதோர் திருப்புமுனையை நமது வாழ்விலும் நல்கி, நலம் பல பெற அருள் புரிவானாக! ஆமீன்.

Friday, June 13, 2014

பராஅத் 2014
                 பராஅத் என்றால் நீங்குதல் - விலகுதல் என்று பொருள்.
இன்றைய தினம் மக்களில் பலருக்கு உயிர் ரிஜ்க் நீங்கி விடுதல் குறித்து அறிக்கை தயாரிக்கப்படுவதால் இன்றைய இரவுக்கு பராஅத்தின் இரவு என்று சொல்லப்படுகிறது.
அரபு வழக்கத்தில் ஷஃபான் நடு இரவு என்று சொல்லப்படுகிறது. ஹதீஸ்களிலும் இந்த வார்த்தை தான் காணப்படுகிறது.
இந்த இரவின் சிறப்பு என்ன? அதற்கான காரணம் யாது? இந்த இரவில் என்ன செய்ய வேண்டும் என்பவை இந்த ஐந்து ஹதீஸ்களில் சொல்லப்படுகிறது.
1. وعن عائشة قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله ؟ قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب رواه الترمذي وابن ماجه وزاد رزين ممن استحق النار وقال الترمذي سمعت محمدا يعني البخاري يضعف هذا الحديث .
2. وعن عائشة عن النبي صلى الله عليه وسلم قال هل تدرين ما هذه الليل ؟ يعني ليلة النصف من شعبان قالت ما فيها يا رسول الله فقال فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم . فقالت يا رسول الله ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى ؟ فقال ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى . ثلاثا . قلت ولا أنت يا رسول الله ؟ فوضع يده على هامته فقال ولا أنا إلا أن يتغمدني الله برحمته . يقولها ثلاث مرات . رواه البيهقي في الدعوات الكبير .
3 وعن أبي موسى الأشعري عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله تعالى ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن . رواه ابن ماجه .
4. ورواه أحمد عن عبد الله بن عمرو بن العاص وفي روايته إلا اثنين مشاحن وقاتل نفس .
( موضوع )
5. وعن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ؟ ألا مسترزق فأرزقه ؟ ألا مبتلى فأعافيه ؟ ألا كذا ألا كذا حتى يطلع الفجر . رواه ابن ماجه .
பராஅத் இரவு பற்றிய இந்த 5 ஹதீஸ்களும் மிஷ்காத்தில் பதிவு செய்யப்பட்ட்டுள்ளன.
இந்த 5 ஹதீஸ்களுமே லயீப் வகையை சார்ந்த்தாகும்.
லயீபான ஹதீஸ் என்றால் அது தள்ளப்பட வேண்டியது என்று பொருளல்ல.
ஹதீஸ் கலை பற்றிய போதிய ஆராய்ச்சியறிவு இல்லாத சிலர் இத்தகைய ஹதீஸ்களைப் பற்றிய அலர்ஜியை மக்களிடம் ஏற்படுத்திவிட்டனர்.
ஹதீஸ்களில் மவ்ளூஃ என்றொரு வகை ஹதீஸ் இருக்கிறது. அது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாகும். அது தான் தள்ளப்பட வேண்டியதாகும்.
லயீபான் ஹதீஸ் என்றால் அறிவிப்பாளரின் தரம் குறைவானது என்பதே பிரதான பொருளாகும்
ஒரு அறிவிப்பாளர் இளைமையாக இருக்கும் போது ஹதீஸின் அறிவிப்பில் ஒரு மாதிரி தகவலை தெரிவித்த பிறகு அவரே முதுமைப் பருவத்தில் அந்த அறிவிப்பை சற்று மாற்றிக் கூறீவிடுவாரெனில் அவருடை மனனத்திறன் குறைந்து விட்ட்து என்று கருதி அந்த ஹதீஸை லயீபானது என்று சொல்லி விடுவார்கள்.
இன்னும் சில சந்தர்ப்பங்களில் ஒரே பெயருடைய இருவரை ஒப்பாய்வு செய்கிற போது மற்றவரை விட இவர் பலம் குறைந்தவர் என்று சொல்வார்கள். இதனால் இரண்டாமவர் அறிவிக்கிற ஹதீஸ் லயீபானது என்று சொல்லப்படும்.
ஒரு உதாரணத்திற்கு முஸ்லிமில் ஒரு ஹதீஸ் வருகிறது. 2597
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ عَنْ عُمَرَ بْنِ حَمْزَةَ الْعُمَرِيِّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدٍ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ يُفْضِي إِلَى امْرَأَتِهِ وَتُفْضِي إِلَيْهِ ثُمَّ يَنْشُرُ سِرَّهَا
திருக்குர் ஆனுக்கு அடுத்த நூல்களில் இரண்டாம் தரத்தில் இருக்கிற ஸஹீஹ் முஸ்லிமில் இருக்கிற இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள உமர் பின் ஹம்ஸா வை பலகீனமானவர் என்று கூறப்படுகிறது.
காரணம் இன்னொரு உமர் பின் ஜைதை உயர்ந்தவர் என்று காட்டுவதற்காக!
في إسناده: عمر بن حمزة العمري وهو ضعيف. قال الذهبي في الميزان بعد أن ساق له هذا الحديث: هذا مما استُنكر لعمر .
وتعقب ابن القطان عبد الحق الإشبيلي في "بيان الوهم والإيهام"
وعمر بن حمزة ضعفه ابن معين، وقال: إنه أضعف من عمر بن محمد بن زيد، وهذا تفضيل لعمر بن محمد بن زيد عليه فإنه ثقة -أعني عمر بن محمد-، فهو في الحقيقة تفضيل أحد ثقتين على الآخر
இன்னும் ஒரு விச்யத்தை புரிந்து கொள்ள வேண்டும். அறிவிப்பாளர்கள் மூன்று தரத்தில் இருக்கிறார்கள்.
· அனைவராலும் பலமானவர் என்று ஏற்கப்பட்டவர்
· அனைவராலும் பலவீனமானவர் என்று கூறப்பட்டவர்
· பலவீனமானவர் பலமானவர் என்று இருவிதமாக விமர்சிக்கப்படுபவர்- கருத்து வேறுபாட்டுக்கு ஆளானவர்.
ஏராளமான அறிவிப்பாளர்கள் இந்த மூன்றாம் நிலையில் இருக்கிறார்கள். அவர்களுடைய ஹதீஸ்களை ஒரு தரப்பின் கருத்தை வைத்து ஒதுக்கி விட்டோம் என்றால் பெருமானாரின் பல செய்திகள் சமூகத்திற்கு கிடைக்காமல் போய்விடும், அதனால் தான் இமாம் அஹ்மது இமாம் நஸஈ போன்ற சில இமாம்கள் தங்களுடைய ஸஹீஹ் தொகுப்புக்களில் அத்தகையோருடைய ஹதீஸ்களுக்கும் இடமளித்தனர்.
الأول: متفق على جلالتهم وإتقانهم، أو على توثيقهم جمهور
الثاني: قسم متفق على ضعفهم، أو على تضعيفهم جمهور أئمة هذا الشأن
القسم الثالث: وهم الرواة المختلف فيهم،
ومما ينبغي أن يعلم في هذا الشأن أنه لا يصلح أن يطرح حديث الراوي أو يتوقف فيه، للاختلاف فيه، أو لإطلاق الكلام فيه، وإلا للزم تضعيف آلاف الأحاديث وردّها.
ولذا فقد ذهب عدد من المحدثين كأحمد في مسنده، والنسائي في سننه وغيرهما إلى أنه لا يترك حديث الرجل حتى يجمع الجميع على تركه .
மார்க்க சட்ட வல்லுனர்களின் கருத்து என்ன வென்றால் ஹதீஸ்களின் தரம் பற்றிய பேச்சில் ஹதீஸ்கலை குறித்த ஆழமான அறிவில்லாதவர்கள் ஈடுபடக் கூடாது.
فهذه قواعد مهمة في التصحيح والتضعيف يجب على من يتصدر للفنتيا أو الحكم على الأحاديث صحة وتضعيفا أن يعيها ويعرفها تمام المعرفة
இதை நீங்களும் நானும் புரிந்து கொள்வது சிரமமல்ல.
எந்த் ஒரு துறையிலும் போதிய விவரமில்லாமல் கருத்துச் சொல்வது அல்லது பரப்புவது நல்லது அல்ல- நாகரீகம் அல்ல- நியாயமல்ல - என்று அனைவரும் ஒத்துக்கொள்வர்,
ஆணால் முஸ்லிம் சமுதாயத்தில் ஏறபட்ட துரதிஷ்டம் ஹதீஸ் பற்றி ஆணா ஆவன்னா தெரியாதவர்கள் எல்லாம் ஸஹீஹ் லயீப் என்று பேசுவது தான். இதில் பெரும் கொடுமை இத்தகையோர் தர்கத்தில் ஈடுபடுவதாகும்
எத்தனை ஆயிரக்கணக்கான ஹதீஸ்கள் இருக்கிறதோ அவை முழுவதுமாக ஆராயப்பட்டு தரம் பிரிக்கப் பட்டு எது எது எந்த அளவில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டு, எது எதன் படி அமல் செய்யலாம் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்யப் பட்டு விட்டது
மார்க்கத்தில் புரட்சி என்ற பெயரில் தனக்குப் பின்னால் ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொள்ள ஆசைப்பட்டு சிலர் வேணுமென்றே அடிப்படை தெரியாத மக்களிடம் ஹதீஸ்களின் தரம் பற்றி பேசி குழப்பத்தை ஏறபடுத்தினர். மக்களிலும் பலர் எதார்த்த நிலையை புரிந்து கொள்ளாமல் – இது விசயத்தில் தங்களது ஆற்றலைப் பற்றி சிந்தித்துப் பார்க்காமல் – மார்க்கம் விச்யத்தில் தமது மனோ இச்சைப் படி பேச ஆரம்பித்து விட்டனர்.
இப்போது ஹதீஸ்களின் தரம் பற்றி அல்லது நம்முடைய நடைமுறைகளுக்கு ஸ்ஹீஹான ஹதீஸ் ஆதாரம் இருக்கிறதா என்பது பற்றி கேள்வி கேட்கிற சகோதரர்களை ஒரு கேள்வி கேட்கிறோம். உண்மையில் உங்களது நெஞசைத் தொட்டுச் சொல்லுங்கள் ஒரு வாத்த்திற்காகவே தவிர இது பற்றி கொஞ்சமாக நீங்கள் தெரிந்து கொள்ள முயற்சி செய்த்துண்டா?
உறுதியாகச் சொல்கிறோம். நீங்கள் ஹதீஸ்கலைப் பற்றி தெரிந்திருப்பீர்கள் எனில் லயீபான ஹதீஸ்கள என்று முகம் சுளிக்கமாட்டீர்கள்,
லயீபான ஹதீஸ் என்றால் ஸஹீஹான ஹதீஸுக்கு எதிராக தாக்குப் பிடிக்காது என்பது மட்டுமே உண்மையான பொருளாகும். அதாவது ஸஹீஹான ஒரு ஹதீஸ் ஒரு செய்தியை சொல்லுகிற போது அதற்கு எதிரான கருத்தை லயீபான ஹதீஸ் சொல்லுமானால் லயீபான ஹதீஸை ஏற்க முடியாது என்பதே சட்டமாகும்.
இது கூட இமாம்களின் இஜ்திஹாதில் தலையீடு செய்யாது. ஏனெனில் இமாம்களின் கால கட்ட்த்திற்கு பின்பு தான் அறிவிப்பாளர்களில் பிரச்சினையும் ஆய்வும் வெளிப்படத் தொடங்கியது.
உதாரணத்திற்கு இமாம் அபூஹனீபா ஹிஜ்ரி 80 ல் பிறந்து 150 ல் வபாத்தானார்.
முதன் முதலாக ஸஹீஹ் திரட்டை வழங்கிய இமாம் புஹாரி - தனது பணியை ஹிஜ்ரி 217 ல் துவக்கினார்.
சுமார் 70 வருடங்களுக்குப் பிறகு நடக்கிற சர்ச்சை அதற்கு முந்தைய காலகட்ட்த்தவரின் ஆய்வை பாதிக்காது என்பது வெள்ளிடை மலை போல தெளிவாகிற விசயமல்லவா?
உண்மையில் ஹதீஸ் லயீப் என்று சொல்லி சமூகத்தை ஹைஜாக் செய்கிறவர்கள். அவர்களுக்கு சான்றாக காட்டுகிற ஹதீஸ்களை துழாவிப் பார்த்தார்களானால் அதிலும் கூட லயீப் என்று ஒருவரால் கூட விமர்ச்சிக்கப் படாதவர்களை பார்க்க இயலாது.
சில நேரத்தில் ஒரு துறையில் லயீபானவராக கருதப் படுகிறவர் இன்னொரு துறையில் பலமானவராக கருதப்படுவார்.
قد يحتج بالراوي في جانب من جوانب العلم دون الآخر كالاحتجاج به في المغازي أو القراءات ونحوها دون الحديث.
قال ابن معين في زياد بن عبدالله البكائي:
"لا بأس به في المغازي، وأما في غيره فلا".
وقال صالح جزرة:
"هو على ضعفه أثبتهم في المغازي" .

இன்றைய சமூகத்தில் பலரும் மவ்ளூஐயும் லயீபையும் ஒரே தரத்தில் வைத்துப் பேசுகிறார்கள். அது நபி மொழிகளுக்கு செய்கிற மாபெரும் அநீதியாகும்.
பெருமானார் விசயத்தில் அவர்கள் சொல்லாத்தை இட்டுக் கட்டிச் சொல்வது எவ்வளவு பெரிய குற்றமோ அதே போன்றதொரு குற்றம் தான் அவர்களது ஹதீஸை மறுப்பதுமாகும்.
லயீபான் ஹதீஸ் மறுக்கப்படக் கூடியதல்ல. லயீப் என்ற வார்த்தையாடலில் சமூகத்தை விமர்சிக்கிற எந்த ஒரு பேச்சும் இத்தகைய தண்டனைக்குரியதே!
உண்மையில் முஸ்லிம் உம்மத்தின் வரலாறு ஸஹீஹையும் லயீபையும் எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியாகும்.
ஸஹீஹை சுன்னத்தாகவும் வலியுறுத்தப் பட்டதாகும் கருதுகிற முஸ்லிம்களின் வரலாறு லயீபை கட்டாயப்படுத்தப் பட்ட அம்சமாக கருதாமல் அமல் செய்வதற்கான தூண்டுதலாகவே எடுத்துக் கொண்டுள்ளது.
எனவே முஸ்லிம்கள் ஒரு காரியத்தை தலைமுறை தலைமுறையாக மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முறைப்படி செய்து வருவார்களானால் அதுவே ஹதிஸை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான சாட்சியாகும்.
இவ்வாறு மார்க்கத்தைப் புரிவது வதுதான் சரியான மார்க்கத்தின் கடைபிடிப்பதற்கான வழியாகும்.
அந்த வகையில் பராஅத் இரவிற்கான செய்தியை கூறும் ஹதீஸ்கள் லயீபானதாக இருந்தாலும் . அந்த இரவின் சிறப்பை வலியுறுத்தும் செய்தி பல தரப்பில் வந்திருப்பதால் அது ஸஹீஹின் தரம் பெற்றதாக கருதப் படுகிறது.
மட்டுமல்ல லயீபான் ஹதீஸ் அமல் செய்வதற்கு ஏற்றதே
لكن يعمل بالحديث الضعيف في فضائل الأعمال باتفاق العلماء ،
இந்த இரவை மகிமைப் படுத்தும் பழக்கம் சஹாபாக்கள் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதை வரலாறு காட்டு கிறது.
மிஷ்காத் ஹதீஸ் எண் 1308. விரிவுரையில் அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் தனது மிர்காதில் எழுதுவதாவது. ஹழ்ரத் உமர பின் கத்தாப் ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் முதலான நாயகத் தோழர்கள் (ரலியல்லாஹு அன்ஹும்) அதிகமானோரும் பின் வரும் துஆவை ஓதி வந்தார்கள்
وعن كثير من السلف ، كعمر بن الخطاب ، وابن مسعود وغيرهما ، أنهم كانوا يدعون بهذا الدعاء : اللهم إن كنت كتبتنا أشقياء فامحه واكتبنا سعداء ، وإن كنت كتبتنا سعداء فأثبتنا ، فإنك تمحو ما تشاء وتثبت وعندك أم الكتاب
(யா அல்லாஹ்! நீ எங்களை அபாக்கியவான்களாக பதிவு செய்து இருந்தால் அதை அழித்து எங்களை பாக்கியவான்களாக எழுது. நீ எங்களைப் பாக்கியவான்களாக எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்து ஏனெனில் நீ நாடுவதை அழிப்பாய் (நாடுவதை) உருதிப்படுத்துவாய் உன்னிடம் மூலநூல் உள்ளது).
இந்த துஆவை ஷாஅபான் 15 ஆவது (பராஅத்) இரவில் ஓதியதாக ஹதீஸில் வந்துள்ளது. (மிர்காத்)
عن ابن مسعود رضي الله عنه أنه كان يدعو بهذا الدعاء أيضا
முல்லா அலி காரி ரஹ் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் ஹதீஸ் விரிவுரையில் இவ்வாறு கருத்துக்களை பதிவு செய்கிறார்
وعن عائشة رضي الله عنها ، عن النبي صلى الله عليه وسلم ، قال : " هل تدرين ما هذه الليلة ؟ " يعني ليلة النصف من شعبان ، قالت : ما فيها يا رسول الله ؟ فقال : " فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة ، وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة ، وفيها ترفع أعمالهم ، وفيها تنزل أرزاقهم " ، فقالت : يا رسول الله ! ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى ؟ فقال : " ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى ثلاثا . قلت : ولا أنت يا رسول الله ؟ ! فوضع يده على هامته ، فقال : " ولا أنا ، إلا أن يتغمدني الله منه برحمته " يقولها ثلاث مرات . رواه البيهقي في " الدعوات الكبير " .
இந்த இரவின் முக்கியத்தை சமுதாயத்திற்கு உணர்ந்த்துவதற்காக பெருமானார் கேள்வியெழுப்பி பதில் கூறியுள்ளார்கள். துஆ வாலும் வணக்கங்கங்களாலும் சிந்தனையாலும் திக்ராலும் இந்த இரவை உயிர்ப்பிக்க வேண்டும் – இப்னு ஹஜர் (ரஹ்)
قال ابن حجر
: نبه - عليه الصلاة والسلام - بهذا الاستفهام التقريري على عظم خطر هذه الليلة وما يقع فيها ، ليحمل ذلك الأمة بأبلغ وجه ، وآكده على إحيائها بالعبادة والدعاء والفكر والذكر ،
இந்த இரவில் என்ன நடக்கிறது?
லவ்ஹுல் மஹ்பூழில் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள விதிப்படியான தகவல்களில் அந்த வருட்த்திற்குண்டானதை பிரதி எடுக்கப்படுகிறது அது லைலத்துல் கத்ர் இரவில் மலக்குகளில் தரப்படுகிறது என ஹதீஸ் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
இறப்பு பிறப்பு வாழ்வாதாரம் உள்ளிட்ட எல்லா காரியங்களின் தீர்ப்புகள் பராஅத் இரவில் எழுதப்பட்டு லைலதுல் கத்ருடைய இரவில் அதை மலக்குகளிடம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.
قال الطيبي : هو من قوله تعالى : ( فيها يفرق كل أمر حكيم ) من أرزاق العباد وآجالهم ، وجميع أمورهم إلى الأخرى القابلة
( وفيها ترفع أعمالهم ) ، أي : تكتب الأعمال الصالحة التي ترفع في هذه السنة يوما فيوما
: يعني كتابة ثانية بعد الكتابة في اللوح المحفوظ
وفيها تنزل أرزاقهم ) ، أي : أسباب أرزاقهم أو تقديرها ، وهو يشمل حسيها ومعنويها .
قال ابن حجر : يحتمل أن المراد تنزيل علم مقاديرها للموكلين بها ، أو أسبابها كالمطر بأن ينزل إلى سماء الدنيا ، أو من سماء الدنيا إلى السحاب الذي بينها وبين الأرض ،
يفرق فيها كل أمر حكيم ஆய்த்திற்கான விளக்கத்தில் தீர்வு. அது லைலத்துல் கத்ர் தான். எனினும் பராஅத் இரவிலும் பங்கீடு நடைபெறுவதாக ஹதீஸ்கள் சொல்கின்றன (மிர்காத்)
أن الليلة التي يفرق فيها كل أمر حكيم في الآية هي ليلة القدر لا ليلة النصف من شعبان ، ولا نزاع في أن ليلة نصف شعبان يقع فيها فرق ، كما صرح به الحديث ، وإنما النزاع في أنها المرادة من الآية ، والصواب أنها ليست مرادة منها ، وحينئذ يستفاد من الحديث والآية وقوع ذلك الفرق في كل من الليلتين إعلاما بمزيد شرفهما اهـ .
நிர்ணயங்கள் நடைபெறுகின்ற இந்த கருணை மிக்க அல்லாஹ் மக்களின் கோரிக்கையின் பால் அருட்கண் கொண்டு பார்க்கிறான். எல்லோருக்கும் மன்னிக்க தயாராகிறான்.
إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب رواه الترمذي
وعن أبي موسى الأشعري رضي الله عنه ، عن رسول الله صلى الله عليه وسلم ، قال : " إن الله تعالى ليطلع في ليلة النصف من شعبان ، فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن " . رواه ابن ماجه
1308 –
وعن علي رضي الله عنه ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا كانت ليلة النصف من شعبان ، فقوموا ليلها ، وصوموا يومها ، فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ، فيقول : ألا من مستغفر فأغفر له ؟ ألا مسترزق فأرزقه ؟ ألا مبتلى فأعافيه ؟ ألا كذا ألا كذا ؟ حتى يطلع الفجر " . رواه ابن ماجه
அதனால் நாம் என்ன செய்ய வேண்டும், அல்லாஹ்வின்
கருணை வெளிப்படுகிற இரவில் அவனிடம் கையேந்துவோம். துஆ செய்வோம்
இன்று மஃரிபுக்கு நாம் ஒதுகிற யாசீன்கள் நமக்காக!
திக்ரி தஸ்பீஹ் நபில் தொழுகைகளில் ஈடுபடுவோம்.
பெருமானார் (ஸல்) அல்லாஹ்வின் அருளிரங்கும் நாளில் தன்னுடைய உள்ளம் கவர்ந்த சஹாபாக்களுக்காக பிரார்த்திக்க ஜன்னத்துல் பகீஃற்கு சென்றார்கள், நாமும் அப்படிச் செல்வோம்.
அத்தோடு நம்முடைய உண்மையான வீடு இதுதான் என்பதையும் நினைவு படுத்திக் கொள்வோம். ஜியாரத்தின் நோக்கத்தை பெருமானார் (ஸல்) நமக்கு அப்படி சொல்லிக் கொடுத்தார்கள்.



கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Wednesday, June 4, 2014


ஸியாரத் பற்றி சிறு குறிப்பு

"எவர் என் கப்ரை தரிசிக்கிறாரோ அவருக்கு எனது ஷபாஅத் (பரிந்துரைப்பு) கடமையாகி விட்டது" (தாரகுத்னி பாகம் 2 பக்கம் 278 பைஹகீ 3/490) என்றும் "என்னை ஸியாரத் செய்வதற்கென்றே தயாராகி எவர் என்னை தரிசிக்கிறாரோ அவர் நாளை மறுமையில் என் அயலில் இருப்பார்" (மிஷ்காத் 240) என்றும் ஹதீஸ் வந்துள்ளது.

இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு சில பெரியார்கள் ஹஜ்ஜுக்கு என்று ஆயத்தமாகி மக்கமா நகரம் செல்வது போன்றே புனித ஸியாரத்தை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு புனித மதீனாப் பயணம் மேற் கொண்டுள்ளார்கள் என்பதை வலிமார்களின் மற்றும் நல்லவர்களான ஸாலிஹீன்களின் வரலாறுகளில் காணமுடிகிறது.

"எவர் ஹஜ்ஜு செய்து விட்டு என் வபாத்திற்குப் பிறகு என் கப்ரை ஸியாரத் செய்கின்றாரோ அவர் என்னை என் ஹயாத்திலேயே சந்தித்தவரைப் போன்றவராகிவிடுகிறார்" (மிஷ்காத் 241) என்று ஹதீஸ் வந்துள்ளதால் ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் பெருமானாரின் புனித ரவ்ழா ஷரீபை தரிசிக்க கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

ஸியாரத்தின் முறைகளும் பலன்களும்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்மை ஸியாரத் செய்வதால் ஏற்படும் பலன்களை குறிப்பிட்டிருப்பது போன்றே பொது கப்ரிஸ்தானங்களுக்குச் சென்று தாங்கள் ஸியாரத் செய்து காட்டி அதன் முறைகளையும் விபரித்ததுடன் அதனால் ஏற்படும் பலாபலன்கள்களையும் நமக்கு எடுத்துக் கூறி இருக்கிறார்கள்.

"ஸியாரத்திற்குச் சென்றால், முஃமீன் முஸ்லிம்களில் நின்றும் வீட்டையுடையவர்களே, உங்கள்மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும். நிச்சயமாக நாங்களும் உங்களுடன் சேரக் கூடியவர்களாக இருக்கிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்வின் சுகத்தைக் கேட்கிறோம் என்று கூற வேண்டும்" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபா பெருமக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். (முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 154)

1. "எவர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ ஸியாரத் செய்து வந்தால் அவரின் பாவங்கள் பொறுக்கப்படுவதுடன் நல்லவர் என்று எழுதப்படும்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (பைஹகீ, மிஷ்காத் பக்கம் 154)

2. "கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். ஏனெனில் நிச்சயமாக அது இவ்வுலகத்தில் பற்றற்ற நிலையை உண்டாக்கி மறுவுலக வாழ்வைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்த வல்லது" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். (இப்னு மாஜா 1569, மிஷ்காத் பக்கம் 154)

3. "இவ்வுலகில் அதிகமான செல்வங்களைத் திரட்டி சுக போகமாக வாழ வேண்டுமென்ற எண்ணம் உங்களை வீணான விஷயங்களில் ஆழ்த்திவிட்டது. (அது எதுவரை என்றால்) நீங்கள் கப்ருகளை ஸியாரத் செய்கின்ற வரை" (அல்குர்ஆன் 102:1,2) என்று வான் மறை குர்ஆன் ஷரீப் கூறுகிறது.

அன்புச் சகோதரர்களே! மேற்கூறப்பட்ட குர்ஆன் ஆயத்தையும் ஹதீஸ்களையும் நன்றாக உற்று நோக்குங்கள். உலகப் பற்று நீங்கி இதயம் ஒளிமயமாவதற்கு சிறந்த சஞ்சீவிதான் ஸியாரத் என்பதை உணர்வீர்கள். உலகப் பற்று என்றால் என்ன வென்று யாரும் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் இவ்வுலகப்பற்று என்பது மரணத்தையும் மறுமை வாழ்வையும் மறந்து விட்டு இவ்வுலகையே சதமாக நம்பி இம்மை இன்பத்திலேயே முழுமையாக ஈடுபட்டிருந்தலாகும் என்று எல்லோருக்கும் நன்றாக விளங்கும். இந்த உலகப் பற்று ஒருவனிடம் குடி கொண்டுவிட்டால் நீதி நேர்மை என்றெல்லாம் பார்க்காமல் இவ்வுலக வாழ்வில் இன்பமாக வாழ்வதற்காக பட்டம் பதவியுடன் பவனி வருவதற்காக செல்வமும் செல்வாக்கும் கிட்டுவதற்காக பஞ்சமா பாதகங்களைக்கூட சர்வ சாதாரணமாக செய்யத்துணிந்து விடுகிறான்.

நமது பெரியவர்கள் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை என்று உலகப்பற்றுக்கு சுருக்கமாக உதாரணம் கூறுவதைப் பார்த்திருப்போம். மனிதனின் வாழ்வை சிந்தித்துப் பார்க்கையில்தான் அதன் பேருண்மையை விளங்க முடியாது. ஏனெனில் மேற்படி மூன்றையும் அடைவதற்காக ஹலால் ஹராம் என்று பாராமல் இறை அச்சம் இன்றி எதையும் செய்ய எத்தனித்து விடுகிறான். எனவேதான், "இவ்வுலகப் பற்று அனைத்து விதமான தவறுகளுக்கும் காரணமாக இருக்கிறது" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்கள். (பைஹகீ ஸாதுத் தாலிபீன் பக்கம் 22). வேறொரு அறிவிப்பில் ஈஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கூறியதாக வந்துள்ளது. (லுக்கதுத்துரர் பக்கம் 83)

அப்படிப்பட்ட உலகப் பற்று என்ற வியாதி ஸியாரத்தின் மூலம் எப்படி நீங்கும் என்று சந்தேகப்படுகிறீர்களா? சந்தேகப்படத் தேவையில்லை. யாரிடமும் கேட்க அவசியமுமில்லை. நீங்கேளே நேரடியாக மண்ணறைக்குச் சென்று ஸியாரத் செய்து அனுபவித்துப் பாருங்கள். ஸலாம் சொல்லுவதடன் மட்டும் நிறுத்திக்கொள்ளும் ஸியாரத்தாக இல்லாமல் சிந்தனைக் கண் கொண்டு ஸியாரத் செய்யுங்கள். சித்தம் தெளிவீர்கள். நேற்று நம்முடன் இருந்தவர் டாம் டீம் என்று இவ்வுலக வாழ்வை கழித்தவர் இதோ ஆறடி நிலத்துக்குள் அடங்கிக் கிடக்கிறாரே, நம்முடைய கதியும் ஒரு நாளைக்கு இப்படித்தானே ஆகும் என்று நினைத்துப் பாருங்கள். சன்னம் சன்னமாக உலகப் பற்று மனதை விட்டு நீங்குவதை நீங்களே தெளிவாக உணர்ந்து கொள்வீர்கள். நாதாக்கள் புனித தர்ஹா ஷரீபுக்குச் சென்று ஸியாரத் செய்யுங்கள். அவர்களின் சன்னிதியில் நடைப்பெறும் கணக்கில் அடங்காத கராமத்துக்களையும் அதிசயங்களையும் கண்ணுற்றுப் பாருங்கள். மரணத்திற்குப் பின்னும் அம்மகான்களுக்கு வல்லோன் வழங்கி இருக்கும் வல்லமையைக் கண்டு அதிசயப் படுவீர்கள். அவர்கள் தங்களின் இப்பூவுலக வாழ்வை எப்படியெல்லாம் வணக்க வழிபாட்டிலும் மார்க்க சேவையிலும் கழித்துள்ளார்கள் என்ற விவரங்களை அவர்களின் வரலாறுகள் என்ற வெட்ட வெளியில் உங்களின் சிந்தனைக் குதிரைகளை செலுத்திப்பாருங்கள். அவர்களின் தக்வாவும் நேர்மையும் தன்னலம் கருதா சேவையும் பரிணமிப்பதை கண்டு கொள்வீர்கள். சும்மா படிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அவைகளைப் படிப்பினையாக எடுத்து படிப்படியாக செயலாக்கம் பண்ணிப்பாருங்கள். நாளடைவில் இறை நெருக்கம் பெற்ற நல்லடியாராக இறை அன்பிற்கு பாத்திரமான அல்லாஹ்வின் நேசராக ஆக அல்லாஹ் போதுமானவனாக இருக்கிறான். ஆமீன்.

ஸியாரத் செய்வது இவ்வுலகப் பற்று என்ற மாசு நம் மனதிலிருந்து நீங்கி மாண்பாளர்களின் பட்டியலில் சேருவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது என்பதால் தான் ஆன்மீக பாதையில் வழிநடத்தும் சங்கைக்குரிய ஷைகுமார்கள் தங்களின் சிஷ்யர்களுக்கு ஸியாரத் செய்து வருமாறு உபதேசிப்பதுடன் அதில் அதிகப்படியான ஆர்வமூட்டுகிரார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸியாரத் செய்துள்ளார்கள்

1. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது மனைவிமார்களில் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் முறை வரும் பொழுதெல்லாம் நள்ளிரவின் கடைசிப் பகுதியில் (தஹஜ்ஜது நேரத்தில்) ஜன்னத்துல் பகீஉவுக்குச் சென்று அங்கு அடங்கியிருக்கக் கூடியவர்களுக்கு பிழை பொறுக்கத்தேடி விட்டு வரும் பழக்கத்தை கொண்டவர்களாக இருந்தார்கள் என்று ஹதீத் ஷரீபில் (முஸ்லிம் ஷரீப் பாகம் 1 பக்கம் 313, மிஷ்காத் 154) இடம் பெற்றிருக்கிறது.

2.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தாயாரின் கப்ரை ஸியாரத் செய்தார்கள். மேலும் அவ்விடத்திலே அழுதார்கள். அவர்களின் அழுகையை பார்த்து சூழ இருந்த ஸஹாபா பெருமக்களும் கண்ணீர் சொறிந்தார்கள். (முஸ்லிம் ஷரீப், மிஷ்காத் 154)

3. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு ஆண்டின் ஆரம்பத்திலும் ஷுஹதாக்களின் கப்ருகளை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் அபூ பக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் உஸ்மான் பின் அப்பான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அப்படியே செய்பவர்களாக இருந்தார்கள். (தபரானி பாகம் 3 பக்கம் 241 கிதாபுல் ஜனாஇஸ்)

பெண்கள் கப்ரு ஸியாரத்துச் செய்யலாமா?

ஸியாரத் செய்வதால் உலகப்பற்று ஒடுங்கி மறுமையின் நினைவு மேலோங்கும் என்றும் பெற்றோர்களை ஸியாரத் செய்வதால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நல்ல பிள்ளை என்ற பெயர் கிடைக்கும் என்றும் சுற்றத்தார்களை ஸியாரத் செய்வதால் அவர்களின் பிரார்த்தனைக்கு ஆளாகலாம் என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஸியாரத் செய்வதால் அவர்களின் ஷபாஅத்து கிடைக்கும் என்றும் சுவனபதியில் அவர்களின் பக்கத்தில் குடியிருக்கும் வாய்ப்பு அமையும் என்றெல்லாம் கூறி ஸியாரத்தின் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூறிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த பாக்கியம் அனைத்தும் ஆண்களுக்கு மட்டும் தான் கிடைக்கும் பெண்களாக இருந்தால் கிடைக்காது என்று வாசகமாகவோ சூசகமாகவோ சாடையாகவோ சைக்கினையாகவோ கூறியதாக எந்த ஹதீஸிலும் இடம் பெறவில்லை.

ஆகவே பெண்களும் ஸியாரத் செய்து அதன் மூலம் கிடைக்கின்ற அனுகூலங்களைப் பெற மிகவும் அருகதை உள்ளவர்களாக இருக்கிறார்கள். பெண்கள் ஸியாரத் செய்வது முற்றிலும் தடையானது என்று இருக்குமானால் உம்முல் முஃமினீன் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஸியாரத்திற்கு சென்றிருக்கமாட்டார்கள். அது போன்றே அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களும் சென்றிருக்கமாட்டார்கள். ஸியாரத்திற்கு செல்லும் போது என்ன சொல்ல வேண்டும் என்று உம்முல் முஃமினீன் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்ட பொழுது ஆண்கள் மட்டும் தான் போக வேண்டும், பெண்கள் போகக் கூடாது என்று கூறித் தடுத்திருப்பார்கள். ஆனால் அப்படி ஒன்றும் நடந்ததாக ஹதீஸில் இல்லை. மாறாக ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்ழா ஷரீபை ஸியாரத் செய்பவர்களாக இருந்தார்கள் (அஹ்மத், மிஷ்காத் பக்கம் 154) என்றும் மக்காவில் அடங்கப்பட்டிருக்கும் தன் சகோதரர் அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை மக்காவுக்குச் சென்று ஸியாரத் செய்து வருபவர்களாக இருந்தார்கள் (முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் பாகம் 3 பக்கம் 5079, மிஷ்காத் பக்கம் 149) என்றும் ஸியாரத்திற்கு செல்லும் போது என்ன ஓத வேண்டும் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து ஸியாரத்திற்கு முழு அனுமதி வழங்கி இருப்பதாகவும் (முஸ்லிம், மிஷ்காத் 154), அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஸியாரத் செய்து வந்ததாகவும் (முஸ்னத் அப்துர் ரஸ்ஸாக் பாகம் 3 பக்கம் 572, முஸ்தத்ரக் பாகம் 1 பக்கம் 377) ஹதீஸ்கள் வந்துள்ளன.

பெண்கள் பொறுமை குறைந்தவர்களாகவும் கடும் மனக்கலக்கம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதால் தான் பெண்கள் ஸியாரத் செய்வது மக்ரூஹ் என்று சில இமாம்கள் கூறுகிறார்கள் என்று மிஷ்காத்(பக்கம் 154 பாபுஸ் ஸியாரத்)தில் குறிபிடப்பட்டுள்ளது.

பெண்கள் ஸியாரத்துச் செய்யும் முறை

உம்முல் முஃமினீன் ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் புனித ரவ்ழா ஷரீப் சென்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அபூ பக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களையும் ஃபர்தா அணியாமலேயே ஸியாரத்துச் செய்பவர்களாக இருந்தார்கள். உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அதில் அடக்கம் செய்யப்பட்ட போது ஃபர்தா அணிந்தே (தன்னை முழுமையாக மறைத்தவர்களாக) ஸியாரத்துச் செய்பவர்களாக இருந்தார்கள். (மிஷ்காத் 154)

ஸியாரத் செய்யும் போது கப்ரை முன்னோக்க வேண்டும்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் உள்ள கப்ருகளுக்கு அருகே சென்றார்கள். அப்போது தாங்களின் திரு முகத்தைக் கொண்டு கப்ருவாசிகளின் மீது முன்னோக்கி ஸலாம் கூறினார்கள். (மிஷ்காத் பாகம் 2 பக்கம் 407 பாபு ஸியாரத்தில் குபூர்)

கப்ரு ஸியாரத்திற்கு சென்றால் யாஸீன் ஓத வேண்டும்

"எவராவது கப்ரு ஸ்தானங்களுக்குச் சென்று ஸூரத் யாசீன் ஓதினால் கப்ராளிகளைத் தொட்டும் வேதனை லேசாக்கப்படுகிறது. மேலும் அவருக்கு அந்த கப்ராளிகளின் எண்ணிக்கையளவுக்கு நன்மைகள் கிடைக்கின்றன" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மிர்காத் பாகம் 4 பக்கம் 382)

பெற்றோர்கள் மரணித்த பிறகு அவர்களுக்காக பிள்ளைகள் செய்ய வேண்டிய நன்மைகள்

ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "யாரசூலுல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பெற்றோர்கள் மரணித்த பின்பு அவர்களுக்காக பிள்ளைகளாகிய நாங்கள் செய்யவேண்டிய நன்மைகள் ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஆம், இருக்கிறது. அவர்களுக்காக தொழுது நன்மை சேர்த்தல், அவர்களுக்காக பிழைபொறுக்கத் தேடுதல், அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், அவர்களின் சுற்றத்தினர்களுடன் சேர்ந்து நடந்துகொள்ளுதல், அவர்களின் தோழர்களுக்கு சங்கை செய்தல்" என்று கூறினார்கள். (அபூதாவூது, இப்னு மாஜா, மிஷ்காத் பக்கம் 420 பாபுல் பிர்ரி வஸ்ஸிலா)

கப்ருகளை உதாசீனம் செய்யாதீர்கள்

1. "கப்ருகள் மீது உட்காராதீர்கள்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 312)

2. "உங்களில் ஒருவர் நெருப்பு கங்கின் மீது அமர்ந்து உடையும் உடலும் கரிந்து போவது ஒரு கப்ரின் மீது அமர்வதை விட சிறந்ததாகும்" என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 312 கிதாபுல் ஜனாஇஸ்)

3. நான் ஒரு கப்ரின் மீது சாய்ந்து கொண்டிருந்ததை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்தார்கள். அப்போது, "இந்த கப்ருடையவருக்கு நோவினை கொடுக்காதே" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (மிஷ்காத் பக்கம் 149 பாபு தப்னில் மய்யித்தி)

4. ஒரு மனிதன் ஸெய்யிதுனா ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித கப்ரின் மீது அசிங்கப் படுத்திவிட்டான். உடனே பைத்தியம் பிடித்து நாய் ஊளையிடுவது போன்று ஊளையிட்டுக் கொண்டிருந்தான். சில தினங்களில் இறந்து விட்ட அவனின் கப்ரிலிருந்தும் ஊளைச் சத்தம் கேட்கப்பட்டது. (நூருல் அப்ஸார் பக்கம் 134)

கப்ரு பிரகாசித்தது

"நஜ்ஜாஷி மன்னர் இறந்த போது அவருடைய மண்ணறையின் மேல் ஒளியைப் பார்க்கப்படக்கூடியதாகவே இருக்கிறது என்று நாங்கள் பேசுபவர்களாக ஆகியிருந்தோம்" என்று உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத் பாகம் 2 பக்கம் 16 கிதாபுல் ஜிஹாத்)

மரணித்தவர்கள் பற்றி வாஹ்ஹாபிகள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் மற்றவர்களையும் ஸியாரத் செய்யவேண்டும் என்று ஆர்வம் ஊட்டுகின்ற ஹதீஸ்கள் அனேகம் இருந்தும் கூட நம்மில் சில (குதர்க்கக்) கொள்கையுடையவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் வபாத்தாகி அடக்கப்பட்டு சில காலத்திலேயே மண்ணோடு மண்ணாகி மக்கிப் போயிருப்பார்களே, அப்படியிருக்கையில் அவர்களை நாம் ஸியாரத் செய்வதும் அவர்கள் மீது ஸலவாத் ஓதுவதும் ஸலாம் கூறுவதும் அவர்களுக்கு எப்படித் தெரியும் என்று சந்தேகம் கொள்கிறார்கள். இப்படியெல்லாம் சந்தேகம் கொள்ளும் மக்கள் பிற்காலத்தில் வருவார்கள் என்பதை உணர்ந்த ஸஹாபா பெருமக்கள் நமது சார்பிலேயே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அந்த ஐயப்பாட்டை எடுத்து வைத்து அதற்குரிய விளக்கத்தையும் பெற்றுத் தந்துள்ளார்கள் என்பதை கீழ் வரும் நபி மொழிக் கருத்தின் மூலம் அறியலாம்.

மரணித்த பின்பும் நபிமார்கள் உயிருடன் இருக்கிறார்கள்

1. ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாப் பெருமக்களிடம், "வெள்ளிக்கிழமை மிகச் சிறந்த நாளாகும். ஆகவே அந்த நாளில் என் மீது அதிகம் ஸலவாத் ஓதுங்கள். நீங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் அனைத்தும் மலக்குகள் மூலம் என்னிடம் சமர்பிக்கப்படுகின்றன." என்றார்கள். அப்போது, "நாங்கள் ஓதும் ஸலவாத்துக்கள் தாங்களுடைய ஜீவியத்தில் எடுத்துக்காட்டப்படுவது போன்றே தாங்கள் மறைவுக்குப் பிறகும் (கப்ரிலும்) காட்டப்படுமா?" என்று சில ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "ஒருவர் என் மீது ஸலவாத் ஓதினால் அவர் ஓதி முடிக்கின்றவரை அவருடைய ஸலவாத்துக்கள் ஒன்றுவிடாமல் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன" என்று கூறியதுடன், "நபிமார்கள் கப்ரில் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள். அவர்களுடைய உடம்பை மண் தின்னாது. அவர்களுக்கு கப்ரில் சுவர்க்க உணவுகளும் வழங்கப்படுகிறது" என்றும் கூறினார்கள். (அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, தாரமி, பைஹகீ, மிஷ்காத் பாகம் 120 பாபுல் ஜும்ஆ)

2. "ரஸூல்மார்களும் நபிமார்களும் தாங்களின் கப்ரறைகளில் தொழுது கொண்டிருக்கிறார்கள்." என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் எண் 3089)

3. "நான் நபிமார்களின் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். அந்நேரம் இப்ராஹீம் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்." என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 96 கிதாபுல் ஈமான்)

4. "நான் மிஃராஜ் சென்ற இரவில் கதீபுல் அஹ்மர் என்ற இடத்தில் நல்லடக்கமாகி இருக்கின்ற மூஸா (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் கப்ருக்கருகே சென்றேன். அப்போது அவர்கள் தமது கப்ருக்குள்ளே தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன்." என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் பாகம் 2 பக்கம் 268)

இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த ஹதீஸுக்கு விளக்கம் கூறுகையில், "ஷுஹதாக்களே ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது என்று குர்ஆன் ஷரீப் கூறும் போது அவர்களைவிட பன் மடங்கு ஏற்புடையவர்களான நபிமார்கள் தாங்களுடைய கப்ருகளில் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்றும் தொழுகை ஹஜ் போன்ற கிரியைகளை நடத்தி வருகிறார்கள் என்றும் கூறுவது தூரமான ஒன்றல்ல." என்று கூறுகிறார்கள். (ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 94 அத்தஅம்முல் 251)

மேலும் நபிமார்கள் இவ்வுலக வாழ்வை விட்டு மறைந்த பின்பும் ஜீவியத்துடன் இருந்து வருகிறார்கள் என்பதற்கு மிஃராஜ் இரவில் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து நபிமார்களையும் சந்தித்தும் அவர்கள் அனைவருக்கும் இமாமாக நின்று தொழவைத்ததும் போதுமான ஆதாரமாகும்.

நபிமார்களின் உடலை மண் அரிக்காது

1. பைத்துல் முகத்தஸ் என்ற புனித பள்ளியின் கட்டுமானப் பணியை ஜின்கள் மூலம் செய்வித்துக் கொண்டிருந்த நபி சுலைமான் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் அதே நிலையில் மரணத்தைத் தழுவி ஓராண்டுக்குப் பின்னும் அவர்களின் உடம்பில் எவ்வித மாற்றமோ நாற்றமோ ஏற்படாமல் இருந்தது. (அல்குர்ஆன் 34:14)

2. நிச்சயமாக நபிமார்கள் மேனிகளை மண் தின்னாது. சிங்கம் புலி போன்றவைகளும் சாப்பிடாது. (அல்கஸாஇஸூல் குப்ரா பாகம் 2 பக்கம் 280)

3. ஹழ்ரத் உஜைர் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்கள் மரணித்து நூறு வருடங்கள் வரை அப்படியே இருந்தார்கள். (அல்குர்ஆன் 2:259)

4. ஹழ்ரத் யூனுஸ் நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்களை மீன்விழுங்கிய பின்பும் சில காலம் வரை மீன் வயிற்றில் அப்படியே இருந்தார்கள். (அல்குர்ஆன் 37:142,143,144)

5. அமீருல் முஃமினீன் ஸெய்யிதுனா உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது ஆட்சி காலத்தில் துஸ்தர் கோட்டை பிடிபட்டது. அங்கு ஹுர்முஜானுடைய இல்லத்தில் ஹழ்ரத் தானியால் அலைஹிஸ் ஸலாம் அவர்களது திரேகம் அழியாமல் வைக்கப்பெற்றிருந்த பெட்டகம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத்திரேகத்தில் உள்ள நரம்புகள் அனைத்தும் இரத்த ஓட்டம் உள்ளதாயிருந்ததுடன் அந்தச் சங்கையான சடலம் பல நூற்றாண்டுகளாக எவ்வித பேதமுமின்றி அப்படியே இருந்தது. (அல்பிதாயா வன்னிஹாயா பாகாம் 2 பக்கம் 41)

ஷுஹதாக்கள் ஹயாத்துடன் இருக்கிறார்கள்

அன்பியாக்கள் கப்ரில் ஹயாத்துடன் இருப்பது போன்றே இஸ்லாத்தின் எதிரிகளான காபிர்களுடன் போராடி அவர்களின் வாளால் வெட்டுண்டு ஷஹீதாகிய வீர தியாகிகளான ஷுஹதாக்களும் தங்களுடைய கப்ருகளில் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்று திரு மறையாம் குர்ஆன் ஷரீபில் தெள்ளத் தெளிவாக வருகிறது.

இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:154)

அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் றப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (அல்குர்ஆன் 3:169)

மரணத்திற்குப் பிறகும் இறை நேசர்கள் உயிருடன் இருக்கிறார்கள்

இஸ்லாத்தின் வைரிகளான காபிர்களுடன் போராடி அவர்களின் வாட்களால் வெட்டப்பட்ட ஷஹீதுகள் கப்ரில் ஹயாத்துடன் இருப்பது போலவே தன் மனதுடன் போரிட்டு அதைவெட்டி வீழ்த்தி, "மரணத்திற்கு முன்பே மரணமாகிக் கொள்ளுங்கள்." (ஹத்யா ஷரீப் பக்கம் 38) மற்றும், "மரணத்திற்கு முன்பே தவ்பாச் செய்து கொள்ளுங்கள்." (இப்னு மாஜா 1081) என்ற நாயக வாக்குகளை மெய்ப்பித்து தம்மை இறைவனில் அழித்துக் கொண்ட அவ்லியாக்களும் கப்ருகளில் ஹயாத்தாக இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், "ஒருவனுக்கு அவன் நப்ஸுதான் பெரிய விரோதி" (நபஸுர் ரஹ்மான் பக்கம் 208) என்றும், "(அந்த) நப்ஸுடன் போராடுபவன்தான் உண்மையான வீரன்" (ஜாமிஉஸ் ஸகீர் ஹதீஸ் எண் 9178, மிஷ்காத் பக்கம் 15) என்றும் கூறியதுடன் இதையே "ஜிஹாதுல் அக்பர் (பெரிய யுத்தம்)" என்றும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிலாகித்து சொல்லியிருக்கிறார்கள். (இஹ்யாஃ பாகம் 3 பக்கம் 7,66)

போர் புரிந்து விட்டு யுத்த களத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த ஸஹாபாக்களைப் பார்த்து, "உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் உண்டாகட்டும், சிறிய போரிலிருந்து பெரிய போரின் பால் வந்து விட்டீர்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். "நாயகமே! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பெரிய போர் என்றால் என்ன?" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "மனதுடன் போரிடுவது தான் பெரிய போர்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கம் கூறினார்கள்.

காபிர்களுடன் வாளேந்திப் போரிடுதல் என்ற சிறிய போரில் மரணித்து ஷஹீதானவர்கள் ஹயாத்துடன் இருக்கிறார்கள் என்று கூறும்போது மனதுடன் போராடுதல் என்ற பெரியபோரில் ஷஹீதானவர்களான இறை நேசச் செம்மல்கள் ஹயாத்துடன் இருந்து வருகிறார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

இறந்தும் இறக்காதவர்

"தன் ஆண்டவனை தியானிப்பவருக்கு தியானிக்காமல் இருப்பவருக்கும் உதாரணமாகிறது உயிரோடு இருப்பவரையும் இறந்தவரையும் போலாகும்." என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (புகாரி ஷரீப் ஹதீஸ் எண் 6023)

இறந்தவர்கள் குர்ஆன் ஓதுகிறார்கள்

ஸஹாபாப்பெருமக்களில் ஒருவர் ஒரு கப்ரின் மீது அது கப்ரு என்று அறியாமல் கூடாரம் அமைத்துவிட்டார். கப்ருக்குள் ஒரு மனிதர் ஸூரத்து முல்க் (தபாரக்கல்லதீ) ஒதிகொண்டிருக்கும் விஷயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அறிவித்த போது ஸூரத்துல் முல்க் அல்லாஹ்வின் வேதனையை விட்டும் மனிதனைக் காப்பாற்றக்கூடியது என்று கூறினார்கள். (திர்மிதீ, மிஷ்காத் பக்கம் 187)

இறந்தவர்கள் வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் சென்றிருந்த போது ஏழு வானங்களில் உள்ள நபிமார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வாழ்த்தினார்கள். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 91 பாபுல் இஸ்ரா, மிஷ்காத் 527)

இறந்தவர்கள் விவாதிக்கிறார்கள்

இறைவன் வகுத்த விதி சம்பந்தமாக ஆதம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களும் மூஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்களும் விவாதித்து இறுதியாக ஆதம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி பாகம் 1 பக்கம் 484 மிஷ்காத் 19)

இறந்தவர்கள் நம் செயல்களைப் பார்க்கிறார்கள்

முஃமீன்களே அமல் செய்யுங்கள். ஏனெனில் உங்களுடைய செயல்களை அல்லாஹ்வும் அவனுடைய ரஸூலும் முஃமீன்களும் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்று நபியே நீங்கள் அவர்களிடம் கூறுங்கள். (அல்குர்ஆன் ஸூரத் தவ்பா:106)

உயிரோடு இருப்பவர்களின் செயல்களை இறந்தவர்களிடம் எடுத்துக் காட்டப்படுகிறது. (இப்னு கஸீர் பாகம் 2 பக்கம் 387)

இறந்தவர்கள் செவியேற்கிறார்கள்

1. பத்ரு யுத்தத்தில் மரணித்த குப்பார்களுடைய பிரேதங்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்திற்கு நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்று அங்கு நின்று கொண்டு அப்பிரேதங்களை நோக்கி, "எங்கள் நாயன் கூறிய வாக்குறுதியை நாங்கள் உண்மையாகக் பெற்றுக் கொண்டோம். உங்கள் நாயன் கூறிய வாக்குறுதியை நீங்கள் உண்மையாகப் பெற்றுக் கொண்டீர்களா?" என்று கேட்ட போது அங்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனிருந்த உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் "யாரஸூலுல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மரணமடைந்தோர் எங்ஙனம் தங்கள் வார்த்தைகளைக் கேட்பார்கள்?" என்று வினவினார்கள். அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "முஹம்மதின் ஆத்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமிட்டுச் சொல்கிறேன். நீங்கள் நான் சொல்பவைகளை அவர்களை விட மிக நன்றாக கேட்பவர்களாக இல்லை" என்று விடையளித்தார்கள். (புகாரி பாகம் 2 பக்கம் 566, மிஷ்காத் பக்கம் 345 பாபு ஹுக்மில் உஸராஇ)

2. பயங்கரமான இடிசப்தத்தால் இறந்து போன நபர்களிடம் ஸாலிஹ் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் பேசினார்கள். (அஃராப் 78,79)

3. ஒரு மய்யித் தம்மை அடக்கம் செய்து விட்டு திரும்பிச் செல்பவர்களின் செருப்போசைகளைக் கூட கேட்கிறது. (புகாரி பாகம் 1 பக்கம் 183, முஸ்லிம் பாகம் 2 பக்கம் 372, மிஷ்காத் பக்கம் 24 பாபு இஸ்பாத்தி அதாபில்கப்ரி)

4. அம்ருப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடைய இறுதிக் கட்டத்தில் கீழ் வருமாறு வஸிய்யத் செய்தார்கள். என்னை அடக்கம் செய்து என் மீது மண்ணைப் போட்டுவிட்டால் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியை பங்கு போடுவதற்குரிய நேரத்தின் அளவுக்கு என் கப்ருக்குப் பக்கத்தில் நில்லுங்கள். ஏனெனில் நான் உங்கள் மூலம் மகிழ்ச்சி அடைவேன். மேலும் எனது நாயனுடைய தூதுவர்களிடத்தில் பதிலளிக்க வேண்டியவைகளையும் அறிந்து கொள்வேன். (முஸ்லிம் பாகம் 1 பக்கம் 76 கிதாபுல் ஈமான்)

குறிப்பு : இந்த ஹதீஸ் இறந்தவர்களுக்கு தல்கீன் ஓத வேண்டுமென்பதை உறுதிப்படுத்துவதுடன் கப்ரைச் சுற்றி உள்ளவர்கள் சொல்வதை இறந்தவர்கள் செவி மெடுக்கிறார்கள் என்பதையும் அறிவிக்கிறது. (ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 76)

மரணித்தவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்கிறார்கள்

இறந்தவர்களுக்கு நல்ல முறையில் கபான் உடுத்தாட்டுங்கள். ஏனெனில் அவர்களுடைய கப்ருகளில் அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள். (திர்மிதி, இப்னு மாஜா)

மரணித்தவர்களால் நமக்குப் பயனிருக்கிறதா?

1. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஃராஜ் சென்றிருந்த போது அல்லாஹ்வினால் நமக்குக் கடமையாக்கப்பட்ட ஐம்பது நேரத் தொழுகையை ஐந்து நேரத் தொழுகையாக இலகுவாக்கி இறைவன் சுருக்கி வசதியாக்கித் தருவதற்கு வழிவகை செய்தவர்கள் மூஸா நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள்தான் என்று ஹதீஸ் வந்திருக்கிறது.

2. அதே மிஃராஜ் இரவில் இப்ராஹீம் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நமக்கு ஸலாம் சொல்லிவிட்டதுடன், "சுவர்க்கம் என்பது மணமான மண்ணும் இதமான நீர் சுனைகள் நிறைந்த நிலப்பரப்பாகும். நாம் ஓதுகின்ற சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர் என்ற திக்ருகள்தான் நாளை மறுமையில் சுவனத்தின் சோலைகளாக ஆகி நமக்குப் பயன் அளிக்கும்" என்று கூறி அனுப்பினார்கள். (திர்மிதி, மிஷ்காத் 202 பாபு தவாபித் தஸ்பீஹி)

3. புனித பள்ளிவாசல்களில் ஒன்றான பைத்துல் முக்கத்தஸ் பள்ளி வாசலின் கட்டுமானப் பணியை ஸுலைமான் நபி அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கவனித்து வந்தார்கள். இந்நிலையில் அவர்களுக்கு மரணம் சம்பவித்து விட்டது. அதன் பின்பும் ஒரு ஊன்று கோளின் பொறுப்பிலே நீண்ட காலம் வரை நிறுத்தாட்டி வைத்து அந்த பள்ளியின் வேலையை இறைவன் பூர்த்தி செய்தான். கரையான் அரித்த அந்த ஊன்று கோல் நொடித்துப் போன போது அதன் பொறுப்பில் இருந்த ஸுலைமான் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் கீழே சாய்ந்து விட்டார்கள். அப்போது தான் அவர்கள் மரணமாகி நீண்ட காலம் ஆயிற்று என்ற விஷயம் தெரிய வந்தது. (அல்குர்ஆன் 34:14)

4. நிச்சயமாக உங்களுடைய அமல்களை (செயல்களை) மரணித்து விட்ட உங்களின் உறவினர்களிடத்திலும் சொந்தக்காரர்களிடத்திலும் (அவர்களின் கப்ருகளில்) எடுத்துக் காண்பிக்கப் படுகிறது. நல்ல அமல்களாக இருந்தால் அதைக்கண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். தீய செயல்களாக இருந்தால் இறைவா! உனக்கு கட்டுப்பட்டு நல்லமல் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை அவர்களின் இதயங்களில் உதிப்பாக்கி வைப்பாயாக என்று பிரார்த்திக்கிறார்கள் என்று (அபுதாவூது, அஹ்மது, இப்னு கதீர் பாகம் 2 பக்கம் 387) ஹதீஸில் வந்துள்ளது.

5. ஸெய்யிதுனா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அடக்கம் செய்து விட்டு மக்கள் அனைவரும் திரும்பி விட்டனர். ஆனால் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மாத்திரம் கப்ரில் கேள்வி கேட்கும் மலக்குகளுக்கும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் மத்தியில் நடக்கும் சம்பாசணையை செவியேற்பதற்காக கப்ருக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள். கப்ருக்குள் வந்த இரு மலக்குகளையும் பார்த்து உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "மலக்குகளே! உங்களிருவரையும் இந்தப் பயங்கரமான கோலத்தில் கண்டபோது பெருமானாரின் பிரதிநிதியான எனக்கே பயம் உண்டாகிவிட்டது. அப்படியானால் சாதாரண முஃமீன்களின் நிலை என்னவாகும். ஆகவே இனிமேல் எந்த முஃமினிடத்திலும் இது போன்ற பயங்கரமான தோற்றத்துடன் வராதீர்கள்" என்றார்கள். இவ்விரு மலக்குகளும், "பெருமானாரின் பிரதிநிதி அவர்களே! உங்களுக்கு நாங்கள் அடிபணிந்தோம்" என்று கூறினார்கள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், "உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவ்வுலகில் வாழும் போதும் மரணித்த பின்பும் மனிதர்களுக்கு பயனளிப்பவர்களாகவே இருக்கிறார்கள்" என்று கூறினார்கள். (நூருல் ழலாம் பக்கம் 18)

எல்லாம் வல்ல ரஹ்மான் ஸியாரத்தின் மூலம் மனத் தெளிவையும் பற்றற்ற நிலையும் அடைந்த நல்லோர்களுடன் நாம் யாவரையும் சேர்த்தருள் புரிவானாக. ஆமீன்!

Kayalislam.com