Wednesday, February 18, 2015

  • இமாம் கஸ்ஸாலி, இமாம் ஜீலானி (ரஹ்) 
  • அந்த வகையில் நினைவுகூரத்தக்க ஆளுமைகள் பலர் இருக்கின்றனர். இக்கட்டுரை ஹி.4ம், 5ம் நூற்றாண்டுகளில் தோற்றம் பெற்ற இரண்டு முக்கியமான ஆளுமைகள் பற்றியும் சமூக சிந்தனை மாற்றத்தில் அவர்களது வகிபாகம் பற்றியும் சுருக்கமாக ஆய்வு செய்கிறது. 
  • கால மாற்றத்துக்கேற்ப எழுகின்ற சவால்களுக்கு அமையவே அக்காலத்தில் தோற்றம் பெறும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனைப் போக்கும் அமைவதுண்டு. அந்த வகையில் ஹி.4ம், 5ம், 6ம் நூற்றாண்டுகளில் முஸ்லிம் உலகுக்கெதிராக தோன்றிய சவால்களாக கீழ்வருவனவற்றை வரையறுக்க முடியும். 
  •            மத்ஹப் முரண்பாடுகள்
  •            சூபித்துவ வழிபிறழ்வுகள்
  •            பாதினீக்களின் தோற்றமும் விளைவும்
  •            தத்துவக்கலை ஏற்படுத்திய சவால்கள்
  •            சிந்தனைக் குழப்பமும் அது முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கமும்
  •            மன்னர்களின் கெடுபிடிகளால் சமூக வாழ்வு சீர்குலைதல்
  •            மேற்சொன்ன சவால்களை சந்தர்ப்பமாகக் கொண்டு சிலுவை வீரர்கள் இஸ்லாமிய உலகை நோக்கிப் படையெடுத்திருந்தமை.
  • இத்தகைய சவால்கள் நிறைந்த காலப் பகுதியில்தான் இருபெரும் ஆளுமைகள் இஸ்லாமிய உலகில் தோன்றினார்கள். 
  • 1.         இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (ஹி. 450-505)
  • 2.         அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) (ஹி.470-563)

  • 1. இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களும் சீர்திருத்தப் பணியும்
  • இவரின் சமகாலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் இமாம் ஜுவைனிஅபூ இஸ்ஹாக் அஷ்- ஷிராஸிஅபுல் காலிம் அல்-குஷைரிஅபூ அலி அல்-பர்னதி ஆகியோர் கலீபா நிளாம் அல்முல்க் ஸ்தாபித்த நிளாமிய்யா பல்ககைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். 
  • இக்காலப் பகுதியில் இமாம் கஸ்ஸாலி பற்றி அறிந்து கொண்ட கலீபா நிளாம்நிளாமிய்யாவில் இணைந்து கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டார். அன்றிலிருந்து அவரின் பணி துரிதமடைந்தது. ஆனாலும் சில வருடங்கள் பணியாற்றிய அவர் அன்று செல்வச் செழிப்பில் மூழ்கி அநியாயத்தில் மூழ்கியிருந்த சமூகத்தைக் கண்டு மனம் வருந்தி கற்பித்தல் பணியிலிருந்து விலகி 10 வருடங்கள் சூபித்துவ வாழ்வு வாழ்ந்தார். 
  • இதன் பின்னரான அவரின் வாழ்வே ஒரு புதிய பாதையை அவருக்குக் காண்பித்தது. விளைவாக அவர் பெரும் சீர்திருத்தவாதியாக மாறினார். இப்பீடிகையுடன் அவரின் சீர்திருத்தப் பணி குறித்து சுருக்கமாக நோக்குவோம். 
  • இமாமவர்கள் தமது பணியை ஆரம்பிக்க முன்னரே சில சமூக சிந்தனையாளர்கள் அகீதாவில் தெளிவை ஏற்படுத்துதல்அரசியல் மாற்றங்களை உண்டுபண்ணுதல் போன்ற அம்சங்களை இலக்காகக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்தனர். காலத்தின் தேவை கருதி இமாமவர்களது இலக்காகவும் இவ்வம்சங்களே மாறின. 
  • உலகை நோக்காகக் கொண்டு வாழ்ந்த உலமாக்களின் சிந்தனைப் போக்கை மாற்றுவதை இமாமவர்கள் தனது முதற் பணியாகக் கொண்டார்கள். உலமாக்களை நோக்கி இமாம் பேசிய ஒரு கருத்தை மாத்திரம் இங்கே குறிப்பிடுகிறோம். அழிவு தரும் நோய் எனும்போது அது உலக ஆசைதான். இந்நோய் வைத்தியர்களுக்குத்தான் அதிகம் ஏற்பட்டுள்ளது. உங்களை மறந்துவிட்டு சிகிச்சைக்கான வழிமுறையை எங்களுக்குச் சொல்ல வருகிறீர்களே! என்று மக்கள் தம்மிடம் கேட்டு விடுவார்கள் என்ற வெட்கத்தினால் இந்நோயிலிருந்து அவர்களை எச்சரிக்கவும் சக்தியிழந்திருந்தார்கள். இதன் காரணமாக நோய் பரவி வைத்தியர்களை இழந்ததனால் மக்களும் அழிந்து போயினர். மக்களை ஏமாற்றும் ககைளில்தான் வைத்தியர்கள் ஈடுபாடு காட்டினர். உபதேசம் செய்யாவிட்டாலும் குழப்பமாவது ஏற்படுத்தாமல் இருக்கக் கூடாதா! பேசாமல் மௌனமாகவே அவர்கள் இருந்திருக்க வேண்டுமே. இது போன்ற பல கருத்துக்கள் இஹ்யாஉ உலூமித் தீனில் இடம்பெற்றிருக்கின்றன. அத்தோடு
  •            கற்பித்தல்பயிற்றுவித்தலுக்கான புதிய பாட விதானங்களை அமைத்தல்
  •            நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பதற்கான முயற்சியைத் துரிதப்படுத்தல்
  •            அநியாயக்கார அரசர்களுக்கெதிராக போராட்டம் நிகழ்த்துதல்
  •            சமூக நீதிக்காக அழைப்பு விடுத்தல்
  •            வழிகெட்ட சிந்தனைப் பிரிவுகளை எதிர்த்தல் போன்ற முக்கியமாக பல பணிகளையும் மேற்கொண்டார்கள். 

  • 2. இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் சமூக மாற்றப் பணி
  • அஷ்ஷெய்க் அபுல் ஹஸன் அலி அந்நத்வி (ரஹ்) அவர்கள்இமாம் கஸ்ஸாலியின் சிந்தனையின் விளைவாக முஸ்லிம் சமூகத்தில் பாரிய விழிப்புணர்வு ஏற்பட்டது என்றாலும் நிரப்பப்பட வேண்டிய பாரிய இடைவெளிகள் தொடர்ந்தும் இருந்தன. இவ்வேளை இன்னுமொரு ஆளுமையின் தேவையை சமூகம் உணர்ந்தது. அப்போதுதான் இப்பாரிய ஆளுமை தோன்றியது என இமாம் அப்துல் காதிர் ஜீலானி குறித்து குறிப்பிடுகிறார்கள்.
  • இமாம் கஸ்ஸாலியின் சிந்தனைகள் இயல்பிலேயே மார்க்க உணர்வும் பற்றும் கொண்டிருந்த இமாம் அப்துல் காதிரிலும் பாரிய தாக்கங்களை உண்டுபண்ணின. இரு இமாம்களதும் இலக்குகளும் ஒன்றாகவே அமைந்திருந்தமையால் இருவரது சிந்தனைகளும் கருத்துக்களும் நெருங்கிய தொடர்பு கொண்டவையாக இருப்பதனை அவதானிக்க முடியும். இஹ்யாஉ உலூமுத்தீன் போலவே அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் எழுதிய அல்-குன்யது லிதாலிபீ தரீகில் ஹக் என்ற நூலும் அமைந்திருக்கின்றமை இதற்கு ஆதாரமாக அமைகிறது. 
  • ஹி. 521ல் தனது பணியை ஆரம்பித்த இமாமவர்கள் முதலில் சிறிய கல்விக் கூடம் ஒன்றை அமைத்தார்கள். பின்னர் தேவை கருதி பாரிய தியாகங்களுக்கு மத்தியில் ஹி.528ல் இக்கல்விக்கூடத்தை விசாலிக்கும் பணியை நிறைவு செய்தார்கள். பின்னர் முழு உலகையும் இஸ்லாத்திற்காக பணி புரிய அழைப்பு விடுத்தார்கள். 
  • உலகத்தாரே! முஹம்மத் (ஸல்) அவர்களது மார்க்கத்தின் சுவர்கள் படிப்படியாக வீழ்கின்றன. அதனது அத்திபாரமும் சிதறிப் போகிறது. தகர்ந்து போனதைக் கட்டியெழுப்புவோம்வீழ்ந்து போனதை மீண்டும் நிறுவுவோம். வாருங்கள். இது பூரணப்பட வேண்டிய பணி. சூரியனே! சந்திரனே! பகலே வாருங்கள். 
  • இவ்வாறு விடுக்கப்பட்ட அழைப்பை நோக்கி 70,000க்கும் அதிகமானோர் இமாமவர்களது பாசறையில் ஒன்று கூடினார்கள். 
  • இமாமவர்கள்உலமாக்கள் மறுமையை மறந்திருந்ததைப் பார்த்துமறுமைக்கான பாதையில் வீற்றிருக்கும் உலகத்துக் கொள்ளையர்களே! சத்தியத்தை அறியாதவர்களே! பொதுமக்களுக்கு நீங்கள் செய்த அநியாயத்துக்கு அவசியம் தௌபா செய்ய வேண்டும். அவர்களுக்கு இழைத்த குற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்களிடம் எந்த நன்மையும் கிடையாது என்று கூறி எச்சரித்தார்கள்.
  • இன்னுமொரு கருத்தில் உலகம் கரங்களில் இருக்க முடியும். சட்டைப் பையினுள் இருக்க முடியும். நல்லெண்ணத்துடன் அதனை சேமிக்கவும் முடியும். ஆனால்உள்ளத்தில் இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்கள். அத்துடன் அரசியல் தளத்திலும் அநியாயக்கார அரகளுக்கெதிராக சுவரொட்டிகளையும் பதாதைகளையும் ஏந்தினார்கள். வறுமை ஒழிப்புக்காக பாரியதொரு பணியை நிகழ்த்தினார்கள். அயராத முயற்சியில் இறுதி மூச்சுவரை ஈடுபட்டிருந்தார்கள். 

  • மாற்றத்தை நோக்கி முஸ்லிம் உம்மா
  • இக்கட்டுரையின் இறுதிப் பகுதி இரு இமாம்களது இணையற்ற பணியின் விளைவாக முஸ்லிம் உம்மாவில் ஏற்பட்ட எழுச்சி குறித்து சுருக்கமாக ஆராய்கிறது.
  • அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தில் கல்விஅரசியல்சமூகவியல்இராணுவம் போன்ற பல துறைகளிலும் ஆன்மீக ரீதியில் பயிற்றப்பட்ட தவைர்கள் உருவாகியமையை முதலாவது பெரும் விளைவாகக் கொள்ள முடியும். 
  • இப்னு நஜா அல் வாஇழ்அல்-ஹாபிழ் அர்-ரஹாவிஅப்துல் காதிர் ஜீலானியின் மகன் மூஸா மற்றும் இமாம் இப்னு குதாமா போன்ற பெரும் அறிஞர்கள் தோற்றம் பெற்றமை கல்வித் துறை கண்ட முன்னேற்றமாகும். அதுபோலவே நன்கு பயிற்றப்பட்ட ஆன்மீகத் தவைர்கள் தத்தமது பிரதேசங்களில் கல்விப் பாசறைகளை உருவாக்கி பணிபுரிந்தார்கள். கல்வி மற்றும் பயிற்றுவித்தல் துறை கண்ட மிகப் பெரிய அடைவாக இது அமைகிறது. 
  • இந்த வகையில்,
  • 1.         அதவிய்யா - அஷ்ஷெய்க் அதீ பின் முஸாபிர் (சிரியா-திமிஷ்க்)
  • 2.         அஸ்ஸஹ்ரவர்தியா - அஷ்ஷெய்க் அபுந் நஜீப் அப்துல் காஹிர் அஸ்ஸஹ்ரவர்தீ (ஈராக்)
  • 3.         பயானிய்யா - அஷ்ஷெய்க் அபுல் பயான் (திமிஷ்க்)
  • 4.         மத்ரஸதுஷ் ஷெய்க் ரஸ்லான் அல்-ஜஃபரி (திமிஷ்க்)
  • 5.         மத்ரஸது ஹயாது பின் கைஸ் அல்-ஹரானி (சிரியா) 
  • போன்ற 20க்கும் மேற்பட்ட பாசறைகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிட முடியும். 
  • அரசியல் தளத்திலும் செல்வாக்குப் பெற்றிருந்த இமாம்களிருவரும் மன்னர்களை அணுகி அவர்களுக்குப் போதனைகள் வழங்குவதிலும் ஆலோசனை வழங்குவதிலும் முனைப்புடன் ஈடுபட்டார்கள். 
  • இமாம் கஸ்ஸாலி அவர்கள்அவரது காலத்தில் பலம் பெற்றிருந்த மன்னர்களான யூசுப் பின் தாஷ்பீன்முஹம்மத் பின் தோமூர்த் ஆகியோரை அணுகி இஸ்லாமிய தேசம் ஒன்றை அமைக்குமாறு தூண்டுதல் அளித்தார்கள். மன்னர்களின் நியமனம் குறித்துக் கூட இமாம் கஸ்ஸாலியிடம் ஆலோசனை பெறப்பட்டது. அதேபோல் இமாம் அப்துல் காதர் அவர்கள் தமது பாசறைக்கு பொதுமக்களும் கல்விமான்களும் அரசர்களும் பல்வேறு தேசங்களில் இருந்து வந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். 400 பெரும் அறிஞர்களும் இமாமவர்களது பாசறையில் இருந்தமை குறிப்பிட்டுக் கூற வேண்டிய அம்சமாகும். இனி முக்கியமானதோர் விளைவு குறித்து நோக்குவோம். 
  • கட்டுரையின் ஆரம்பத்தில் முஸ்லிம் உலகுக்கெதிராக தோன்றிய முக்கிய சவால்களைக் குறிப்பிட்டிருந்தோம். அவற்றுள் சிலுவை வீரர்களின் படையெடுப்பே மிகப் பெரிய சவாலாக இருந்தது. சிலுவை வீரர்களின் இஸ்லாமிய உலகை நோக்கிய நகர்வை ஜிஹாத் புரிந்து பின்வாங்கச் செய்யும் அளவுக்கு முஸ்லிம் உலகு அகீதா ரீதியாக அன்று பலம் பெற்றிருக்கவில்லைஇப் பின்னணியே இரு இமாம்களும் அகீதாவை சீர்திருத்தும் பணியை இலக்காகக் கொண்டமைக்கான காரணமாகும். 
  • இமாம்களின் இம்முயற்சியே ஆக் ஸன்கர் (ஹி.477), இமாதுத்தீன் ஸன்கீநூருத்தீன் ஸன்கீபிக்ஹ் மற்றும் ஹதீஸ் கலைஅறிஞர் அல்- ஹாபிழ் ஸலாஹுத்தீன் அய்யூபி போன்ற தளபதிகளின் வெற்றிக்குப் பின்னால் மறைந்திருந்தது. ஏனெனில்,குறிப்பாக நூருத்தீன் மற்றும் ஸலாஹுத்தீன் படைகளில் ஆலோசகர்களாகபடை வீரர்களாக பணியாற்றியோர் இவ்விரு இமாம்களின் பாசறையில் பயிற்றப்பட்டவர்களே. 
  • கி.பி. 1098 (ஹி.492)ல் ஆக்கிரமிக்கப்பட்ட குத்ஸை ஹி.570 காலப்பகுதியில் ஒரு நூற்றாண்டுக்குள்ளாலேயே சிலுவை வீரர்களிடம் இருந்து மீட்டெடுத்த ஸலாஹுத்தீன் தனது ஆலோசகராக இருந்த அல்-காழி அப்துர் ரஹீம் பின் அலி குறித்து நான் இத்தேசத்தை எனது வாளினால் வெற்றி பெறவில்லைநிச்சயமாக அல்காழி அவர்களது ஆலோசனையினாலேயே வெற்றி பெற்றேன். அவர் தனது அரசியல் சாணக்கியத்துடன் மிகுந்த பேணுதல் உள்ளவராக இருந்தார். அதிகமாக நோன்பு நோற்பவராகவும்தொழுபவராகவும் குர்ஆன் ஓதுபவராகவும் இருந்தார். பணிவுள்ளவராகவும் நோயாளிகளைத் தரிசிப்பவராகவும் ஏழைகளுக்கு உதவி புரிபவராகவும் இருந்தார் என்று குறிப்பிடுவதன் மூலம் எத்தகைய ஆளுமைகள் அப்பாசறையில் உருப்பெற்றிருக்கின்றன என்பதை ஊகிக்க முடிகிறது. 
  • எனவேதான் நேற்றைய கனவுகள் இன்றைய யதார்த்தங்கள் என்று இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) குறிப்பிடுவது போல இரு இமாம்களின் பணிமுஸ்லிம் சமூகத்தை ஈற்றில் வெற்றிப் பாதைக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. மட்டுமன்றிபுதிய பரம்பரையொன்றையும் உருவாக்கியது. 
  • உண்மையில் இன்றைய 21ம் நூற்றாண்டின் பேசுபொருளாக மாறியிருக்கும் இஸ்லாம் கிட்டிய எதிர்காலத்துக்குள் சர்வதேச தலைமை பீடத்தை ஏற்க வேண்டுமெனின் இமாம் கஸ்ஸாலிஇமாம் அப்துல் காதிர் ஜீலானி போன்ற இமாம்களின் பணியையும்தியாகத்தையும் செய்பவர்களாக எமது அறிஞர்களும் தவைர்களும் மாற வேண்டும். பிற்கால சமூகத்தை வழி நடத்தும் தவைர்களையும் சிந்தனையாளர்களையும் உருவாக்கும் பணியில் முழு முஸ்லிம் உம்மாவும் மிக வினயமாக ஈடுபட வேண்டும். 

  • அல்-குர்ஆனினதும் நபி (ஸல்) அவர்களது போதனைகளையும் கடைப்பிடித்து வாழும் மனிதர்கள் நிறைந்த தூய தேசமொன்றை உருவாக்க வேண்டும். அப்போதுதான் எமது இன்றைய கனவுகள் நாளை யதார்த்தங்களாய் மாறும் எனும் யதார்த்தத்தை இதனூடாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

Saturday, January 31, 2015



மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்களின் வாழ்க்கை வரலாறு!!


மாபெரும் தவசீலர், மெய்நிலை கண்ட ஞானி, சங்கைக்குரிய குதுபுர் ரப்பானி, சுல்தானுல் அவ்லியா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் உலக முஸ்லிம்கள் அனைவராலும் போற்றிக் கொண்டாப்படும் ஒரு உன்னத மகான் ஆவார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் கூட மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வைத்து அவர்களை போற்றுகிறார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை எனலாம். “காதிரியா தரீகா” என்னும் ஆத்மீக பள்ளியை உருவாக்கிய செம்மல் இவர்கள். இதன் மூலம் எத்தனையோ இறைநேசர்களை உருவாக்கி, மனிதர்களை புனிதர்களாக ஆகிய மாபெரும் மகான். அவர்களின் சிறப்பான சொற்பொழிவால் பல லட்சக்கணக்கான மக்களை புனித இஸ்லாத்திற்குள் கொண்டு வந்த வள்ளல். இப்படிபட்ட உத்தமரின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவது மிக முக்கியமானது. 
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள்
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் 11 வது தலைமுறையில் பிறந்த பேரப்பிள்ளையாவார்கள். இவர்களின் தந்தையாரின் பெயர் ஸைய்யது அபூ ஸாலிஹ் இப்னு மூஸா ( رضي الله عنه) தாயாரின் பெயர் உம்முல் கைர் என்னும் அமத்துல் ஜப்பார் என்பதாகும். இவர்களின் தந்தையார் ஒரு ஸூஃபி மகானாகவும், தாயார் சிறந்த தக்வாவுடைவர்களாகவும் விளங்கினார்கள். மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தந்தைவழியில் ஹஸனியாகவும் தாய்வழியில் ஹுஸைனியாகவும் விளங்குகிறார்கள். 
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் குழந்தை பருவத்திலேயே கல்வியில் சிறப்புற்று விளங்கினார்கள். ஏனைய மாணவர்கள் மனனஞ் செய்ய ஒரு வாரம் பிடிக்கும் ஒரு பாடத்தை இவர்கள் ஒரே நாளில் மனனஞ் செய்து விடுவார்கள். தனது உயர்தர கல்வியை பக்தாதுக்கு சென்று அங்கு பிரபலமாக இருந்த மாபெரும் அறிஞர்களிடம் கற்றார்கள். தப்ஸீரிலும், ஹதீஸிலும், ஃபிக்ஹு பாடங்களிலும் சிறந்து விளங்கினார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் பிரபலமாக இருந்த மார்க்க அறிஞர்களிடம் சென்று கல்வி கற்றார்கள். இவர்களின் ஆசிரியர்களாக விளங்கியவர்கள் அபூ ஸையீதினில் முபாரக் பின் அலி முகர்ரமி, அபுல் உபா அல பின் ஹகீம், அபூ காலிப் அஹ்மது, அபுல் காஸிம் அலி, அபூ ஸகரிய்யா யஹ்யா தப்ரேஸி رضي الله عنه போன்றவர்கள். இவர்களிடம் எல்லா விதமான மார்க்க கல்வியை கற்று, தம் ஆத்ம சக்தியாலும், சிந்தனையாலும் குர்ஆனின் விளக்கங்களை புரிந்துக் கொண்டார்கள். ஏழு ஆண்டு காலம் விடா முயற்சியுடன் கல்வி பயின்று பக்தாத் சர்வ கலாசாலையின் உயர்தர பரீட்சையில் ஹிஜ்ரி 496 துல்ஹஜ் மாதம் தேர்ச்சி பெற்றார்கள். 
எல்லா விதமான கல்வியையும் கற்ற பின் தனக்கு ஒரு ஆத்மீக வழிக்காட்டி தேவை என்பதையும் அதுவே தன்னை அல்லாஹ்விடம் நெருங்கச்செய்யும் வழி என்றும் உணர்ந்தார்கள். எனவே தனக்கு ஆத்மீக வழிக்காட்ட ஒரு ஞானகுருவை தந்தருளுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். அப்பொழுது இறைவன் அவர்களுக்கு ஷைகு ஹம்மாத் என்னும் மார்க்க பெரியாரை தேர்ந்தெடுத்து கொடுத்தான். அந்த ஷைக் அவர்கள் கௌஸுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்களுக்கு பலவகையான ஆத்மீக ஞானங்களை கற்றுக்கொடுத்தார்கள். பல கடுமையான சோதனைகளை செய்தார்கள். எனினும் கௌஸுல் அஃலம் அவர்கள் சகிப்புதன்மையுடனும் திட நம்பிக்கையில் மலையாகவும் விளங்கினார்கள். பின் மூன்று ஆண்டுகளில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆத்மா ஞானத்தில் தேர்ச்சி பெற்றார்கள். அப்போது ஷைகு ஹம்மாத் அவர்கள், ” இந்த அஜமி அப்துல் காதிர் வரும் காலத்தில் மாபெரும் ஞானியாக விளங்குவார். தம் பாதம் சகல வலிமார்களின் தோள் மீது இருப்பதாக சொல்லும்படி அல்லாஹ்வால் உத்தரவிடப்படுவார். இவர் காலத்திலுள்ள எல்லா வலிமார்களும் இவருக்கு தலைப்பணிவார்கள்” என்று கூறினார்கள். 
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தனது ஆத்மீக கல்வியை நிறைவு செய்த பின் இபாதத்துகளிலும், தியானத்திலும் ஈடுபடுவதற்காக பக்தாதை விட்டு வெளியேறி ஈராக் காடுகளை நோக்கி சென்றார்கள். கர்க் என்னும் காட்டில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து கடும் தவம செய்தார்கள். அது எப்படிப்பட்ட தவம் என்றால் வருடத்தில் ஒரு தடவை அவர்களுக்கு ஒரு மனிதர் கம்பளி உடுப்பு ஒன்றை கொடுப்பார். அதை அணிந்துக்கொண்டே நாட்களை போக்குவார்கள். அவர்கள் செருப்பு அணியாமலேயே கல்லும், முள்ளும் நிறைந்த காடுகளில் நடந்து போவார்கள். ஒரு வருஷம் முழுவதும் அவர்கள் வெறும் காய்கறிகளை உண்டு தண்ணீர் குடிக்காமல் தவம் செய்தார்கள். மறு ஆண்டில் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு வேறு எதுவும் சாப்பிடாமல் தவம் செய்தார்கள். மூன்றாம் ஆண்டில் தண்ணீரும் அருந்தாமல், எதுவும் சாப்பிடாமல், தூங்காமல் தவத்தில் ஈடுபட்டார்கள். மேலும் அவர்கள் இஷாவுக்காக செய்யும் வுளுவுடன் சுபஹ் தொழுகையையும் தொழுதார்கள். அதாவது இஷா தொழுகை முடிந்ததும் அவர்கள் ஒற்றைக் காலில் நின்றுக்கொண்டு அருகிலுள்ள ஒரு தூணில் தம் ஒரு கையை தூக்கி வைத்து கட்டிக் கொள்வார்கள். தமக்கு தூக்கம் வராமல் இருக்க இப்படி செய்து விட்டு திருக்குர்ஆன் முழுவதையும் ஓத ஆரம்பிப்பார்கள். அப்பொழுது பொழுதும் புலர்ந்து விடும். உடனே சுபஹ் தொழுகையையும் தொழுவார்கள். ஸுப்ஹானல்லாஹ்! எப்படிப்பட்ட கடும் தவம்! அதனாலேயே அவர்களுக்கு மாபெரும் தவசீலர், மெய் நிலை கண்ட ஞானி என்று பல பட்டங்கள் ஏற்பட்டன. கடமையான தொழுகைகளை முறைப்படி முடித்துக் கொண்டு அவர்கள் நபில் தொழுகையின் மூலமும், குர்ஆனைப் பற்றி சிந்தனையில் இருப்பார்கள். இவ்விதமான கடும் தவத்தில் அவர்கள் இருந்த போது பல நபிமார்களுக்கும், மகான்களுக்கும் வழிக்காட்டிய ஸைய்யதுனா கிழ்று (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அவர்கள் தனது அபாரமான கடும் தவத்தாலும், முயற்சியாலும் சிறப்பான ஆத்மீக படித்தரங்களை அடைந்தார்கள். 
ஹிஜ்ரி 521 ஷவ்வால் 11ம் இரவன்று கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்களின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தோன்றி, “அப்துல் காதிரே! வழிதவறி செல்லும் மக்களை ஏன் நேர்வழிக்கு அழைக்காமல் இருக்கிறீர்கள்” எனக் கேட்டார்கள். அதைக் கேட்டு திடுக்கிட்ட கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள், “யா ரசூலல்லாஹ்! (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நான் அரபி இல்லையே! அஜமிதானே. எனவேதான் அரபிகளின் நகரத்தில் அரபு மொழியில் பேச தயங்குகிறேன்” என்று கூறினார்கள். இந்த பதிலைக்கேட்ட அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் சிரித்த முகத்துடன் கௌஸு நாயகத்தின் வாயை திறக்கச்சொல்லி 7 தடவை தங்களின் முபாரக்கான எச்சிலை துப்பினார்கள். அதற்கு பிறகு கௌஸு அஃலத்தின் திருவாயிலிருந்து ஞானப்போதனைகளும், மார்க்க பயான்களும் வெளிவரத்தொடங்கியது. அவர்களின் பயானைக்கேட்க பல ஊர்களிலிருந்து முஸ்லிம்கள் கூட்டம், கூட்டமாக பக்தாத்துக்கு வரத்தொடங்கினார்கள். கௌஸு நாயகம் رضي الله عنه இஸ்லாத்திற்கு செய்த சேவையால் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் நேர்வழிப்பெற்றார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களும், கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தை தழுவினார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் அவர்களின் முரீதாகி அவ்லியாக்கள் ஆனார்கள். அவர்களின் ஒரு பயானுக்கு 70 ஆயிரம் பேர்கள் கூடி பயான் கேட்டார்கள். பயானை கேட்டதும் மட்டுமல்ல அதை தங்கள் வாழ்க்கையில் எடுத்தும் நடந்தார்கள். மக்கள் தன் உள்ளங்களை பரிசுத்தப்படுத்தி நல்லவர்களாக வாழவே கௌஸு அஃலம் رضي الله عنه அவர்கள் காதிரியா தரீக்காவை உருவாக்கினார்கள். திக்ருகளையும், நபில் தொழுகைகளையும் போதித்தார்கள். ஒவ்வொரு ஹாஜத்துகளையும் அடைய தன் முரீதுகளுக்கு திக்ரு முறைகளை சொல்லி கொடுத்தார்கள். அவர்கள் இவைகளை தொகுத்து கொடுத்த கிதாபிற்கு “ராத்திப்” என்று பெயர் கூறப்படுகிறது. இந்த ராத்திப்புகளையே இன்றும் காதிரி தரீக்காவை பின்பற்றுவோர் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும், தக்கியாக்களிலும் ஓதி வருகிறார்கள். 
ஸைய்யதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி رضي الله عنه அவர்கள் ஒரு முறை ஒரு தெரு வழியாக வரும்போது, வழியில் பலஹீனமான வயோதிகர் ஒருவர் அமர்ந்திருந்தார். கௌஸுல் அஃலம் அவர்களை கண்ட அவர், அவர்களுக்கு ஸலாம் சொன்னார், அதற்கு அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பிறகு அவர், தம்மை தூக்கி நிறுத்தும்படி கேட்டுகொண்டார். கௌஸுல் அஃலம் அவர்கள் அவரை தூக்கி நிறுத்தினார்கள். உடனே அவர் தம் முதுமை நீங்கி வாலிபராக மாறினார். இதைக்கண்டு திடுக்கிட்ட கௌஸுல் அஃலம் அவர்களிடம் அவர் சொன்னார்: ” நான்தான் தீன் என்னும் சன்மார்க்கமாகும், நீங்கள் இந்த தீனை ஹயாத்தாக்கிய முஹ்யித்தீன் ஆவீர்கள்.” என்று கூறி மறைந்தார். இவ்வாறு கூறி மறைந்தவர் ஒரு மலக்கு ஆவார். 
கௌஸுல் அஃலம் அவர்களின் 89ம் வயதில் ஒரு மகத்துவமிக்க சம்பவம் நடந்தது. அல்லாஹ்வின் உத்தரவு ஒன்று அவர்களுக்கு வந்து அதை அவர்கள் மக்களுக்கு கூறினார்கள் : ” எனது பாதம் எல்லா வலிமார்களின் தோளின் மேல் இருக்கிறது” என்று கூறியபோது உலகம் முழுவதிலும் இருந்த வலிமார்கள் அனைவர்களும் தமது ஆத்ம காதுகளால் கேட்டார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் கௌஸு அஃலம் அவர்களின் பாதத்தை தங்கள் தோள் மீது ஏற்பதாக கூறினார்கள். 
மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தமது வாலிப வயதில் ஆத்மீக கல்வி கற்பதிலும், தவத்திலும் ஈடுபட்டு விட்டதால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் ஹிஜ்ரி 521ல் நபிகள் நாயகம் (ஸலலல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கௌஸுல் அஃலம் அவர்களின் கனவில் தோன்றி திருமணம் செய்து கொள்ளுமாறும், அதுவே உங்களுடைய ஆத்ம ஞானம் சம்பூரணமடைய அவசியமும் ஆகும் என்றார்கள். அதையொட்டி அவர்கள் திருமணம் செய்தார்கள். தமது 51ம் வயதில் நான்கு மனைவிமார்களை மணந்து 27 ஆண் குழந்தைகளையும், 22 பெண் குழந்தைகளையும் மொத்தம் 49 குழந்தைகளை பெற்றார்கள். இவர்களின் ஆண் மக்கள் சிறந்த கல்விமான்களாகவும், வலிமார்களாகவும் ஆனார்கள். அதில் சிலர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று இஸ்லாமிய தஃவா பணியை சிறப்பாக செய்தார்கள். 
40 ஆண்டுகள் சன்மார்க்க பிரசாரம் புரிந்த மாபெரும் தவசீலர் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி رضي الله عنه அவர்கள் தங்கள் பூத உடலைவிட்டு மறையும் நேரம் வந்தது. அதை லௌஹுல் மஹ்பூல் என்னும் ஏட்டில் அவர்களால் பார்க்க முடிந்தது.
கௌஸுல் அஃலம் அவர்கள் தனது இறுதி நேரத்தை அடைந்தபொழுது மலக்குமார்களும், அவ்லியாக்களின் ரூஹுகளும் அவர்களை பார்க்க வந்துக்கொண்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் ஸலாம் கூறிக்கொண்டே இருந்தார்கள். பிறகு கௌஸுல் அஃலம் அவர்கள் குளித்துவிட்டு இஷா தொழுகையை தொழுதார்கள். நீண்டநேரம் ஸுஜூதில் இருந்து தன் குடும்பத்தார்களுக்கும், சொந்தக்காரர்களுக்கும் தன் முரீதுகளுக்கும், முஸ்லிம்களுக்கும் துஆ கேட்டார்கள். ஸுஜூதிலிருந்து அவர்கள் தலையை உயர்தியதும் ” சாந்தியடைந்த ஆத்மாவே! உன் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி வருவாயாக. என் சுவர்க்கத்தில் புகுந்து கொள்வாயாக” என்ற திருக்குர்ஆன் வசனம் அசரீரியாக கேட்டது. கடைசி நேரம் வந்துவிட்டதை உணர்ந்த கௌஸுல் அஃலம் رضي الله عنه அவர்கள் தன் வாயால் திருக்கலிமாவை கூறி மூன்று தடவை அல்லாஹ் என்று அழைத்தார்கள். அதோடு தன் 91வது வயதில் ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் பிறை 11அன்று இந்த உலகை விட்டு மறைந்தார்கள். அல்லாஹ்வின்பால் அண்மித்துவிட்ட அவர்களுக்கு மரணமேது!!! 

Friday, October 24, 2014

முஹர்றம் பத்தாம் நாள் ஆசூறா தினம் அதிவிசேடங்களை உள்ளடக்கிய                                                                               மாதினமாகும்
  • அன்றுதான் நபீ ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் மன்னித்தான்
  • அன்றுதான் நபீ நூஹ் (அலை) அவர்களுடைய கப்பல் தூபான் வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றப்பட்டு ஜூதி மலையில் தரை தட்டியது.
  • அன்றுதான் நபீ மூஸா (அலை) நபீ ஈஸா (அலை) பிறந்தார்கள்.
  • அன்றுதான் சர்வாதிகாரி நும்றூதால் நெருப்புக்கிடங்கில் எரியப்பட்ட நபீ (இப்றாஹிம்) அலை காப்பாற்றப்பட்டார்கள்
  • அன்றுதான் நபீ யூனுஸ் (அலை) அவர்களின் சமூகத்தை விட்டு வேதனை நீக்கப்பட்டது.
  • அன்றுதான் நபீ ஐயூப் (அலை) அவர்களின் துன்பம் நீங்கியது.
  • அன்றுதான் நபீ யஃகூப் (அலை) அவர்கள் தனது மகன் யூசுப் (அலை) அவர்களை இழந்ததால் தேய்ந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.
  • அன்று பாழ்கிணற்றில் எறியப்பட்ட நபீ யூசுப் ( அலை) அதிலிருந்து வெ ளியேற்றப்பட்டார்கள்.
  • அன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பமாக்கப்பட்டது.
  • அன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்தது.
  • அன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியில் உள்ளவர்களுக்கு இறங்கியது
  • தூபான் வெள்ளத்தின் பின் பூமியில் முதன் முதலாக சமையல் செய்யப்பட்டது. இதை நூஹ் நபீ அவர்களே செய்தார்கள்.
  • அன்றுதான் சுலைமான் நபீ அவர்களுக்கு முழு உலக ஆட்சியும் வழங்கப்பட்டது.
  • அன்றுதான் நபீ ஸக்கரிய்யா (அலை) அவர்களுக்கு நபீ யஹ்யா (அலை) அவர்கள் பிறந்தார்கள்.
  • அன்றுதான் பிர்அவ்னும் அவனதும் சூனியக்காரர்களும் தோற்கடிக்கப்பட்டனர்.
  • அன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்தான்
  • அன்றுதான் நபீ பேரர் ஹுசைன் (றழி) அஹ்லுல்பைத் என்றழைக்கப் படுவோரில் அநேகரும் கொலை செய்யப்பட்டனர்.
ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு) 

ஆஷீரா நோன்பு (ஆஷூரா பிறை 9 மற்றும் 10)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷீரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் நீங்கள் நோன்பு நோற்கும் இந்நாளின் சிறப்பு என்ன ? என்று கேடட்டார்கள். அதற்கு யூதர்கள் , இது ஒரு புனிதமான நாள், இன்று தான் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவரது சமூகத்தினரையும் (அவர்களது) விரோதிகளான ஃபிர்அவ்ன், அவனது கூட்டத்தினரிடமிருந்து காப்பாற்றி அவனையும் அவனது கூட்டத்தினரையும் நீரில் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நாங்கள் நோன்பு வைக்கின்றோம் என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், மூஸா (அலை) அவர்களுக்கு உங்களை விட நானே அதிக உரிமையும், தகுதியும் உடையவன் என்று கூறி விட்டுத் தாமும் நோன்பு நோற்று, பிறரையும் நோன்பு நோற்கும்படி ஏவினார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

ஆஷீரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது , அடுத்த ஆண்டு நான் உயிரோடிருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் மறுவருடம் இந்த தினத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து விட்டார்கள். (முஸ்லிம்)

அபூகதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: '' நபி(ஸல்) அவர்களிடம் ஆஷீரா நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், '' கடந்த ஒரு வருட பாவங்களுக்கு அது பரிகாரமாகும்'' என்று கூறினார்கள். (முஸ்லிம்)

ஆக முஹர்ரம் மாதம் ஒன்பது மற்றும் பத்தாவது நாட்களில் நோன்பு நோற்பது நபிவழி என அறியலாம்.
அல்லாஹ்வுக்குவிருப்பமானது

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம். முஹர்ரம் என்பதன் பொருள் புனிதமானது என்பதாகும். இதனை அல்லாஹ்வின் மாதம் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டது இதன் மகத்துவத்துக்கு இன்னுமொரு சான்றாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரழி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
'' ரமளானுக்குப் பின் நோற்கும் நோன்புகளில் மிகவும் சிறப்பான நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் மிகச் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும் '' ( முஸ்லிம், அஹ்மத்)

பத்தாம் நாளோடு சேர்த்து ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்
1. அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாம் நாளையும் நோற்பேன் என்றார்கள். (முஸ்லிம்)
2. ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோக்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)
3. ஆஷுரா நாளின் நோன்பை நோருங்கள் அதற்கு முன் ஒருநாள் அல்லது அதற்கு பின் ஒருநாள் நோன்பு நோற்று யூதர்களுக்கு மாறும் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்னறார்கள். (அஹ்மத், இப்னு குஸைமா, பைஹகி)
அல்லாஹ் மிக நன்கறிந்தவன்.

Thursday, October 23, 2014

முஹர்ரம் மாதமும் அது தரும் பாடமும்.




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ..


முஹர்ரம் மாதமும் அது தரும் பாடமும்.

அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை ஆகும். ( அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும். அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும்” (ஆதாரம்: புகாரி)

மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள், புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை:

1) துல் கஃதா, 2) துல் ஹிஜ்ஜா, 3) முஹர்ரம், 4) ரஜப்

எனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது. ஹுரும் என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன.

அல்லாஹ் புனிதமாக்கிய மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும். அதனை நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளார்கள். அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் பேணுவது நம் கடமையாகும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான் ''அதில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் '' (9:36).

புனிதம் மிக்க மஸ்ஜிதுல் ஹராமில் குற்றமிழைப்பது எவ்வளவு குற்றமோ அது போன்றே புனிதம் மிக்க மாதங்களில் தவறிழைப்பதும் பெரும் குற்றமாகும். எனவே மற்ற மாதங்களைக் காட்டிலும் அதிகமாகப் புனிதம் மிக்க மாதங்களைப் பேணுதல் அவசியம் ஆகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்" (ஆதாரம்: முஸ்லிம்)

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு:

இம்முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம் என எம்பெருமானார் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட சிறப்புமிகு மாதம் ஆகும்.
முஹர்ரம் மாதத்திற்கென்று பல்வேறு தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் தலையாயவை இரண்டாகும்.
இம்மாதம் இஸ்லாமிய வருடப்பிறப்பின் ஆரம்ப மாதமாகும்.
இம்மாதத்தின் 10ஆம் நாள் இறைத்தூதரான மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் சத்திய அழைப்பிற்கு செவிசாய்த்து, ஏகஇறைவன்மீது நம்பிக்கைக் கொண்ட சமூகத்தினரையும் (பனூ இஸ்ரவேலர்), அவர்களை அழித்தொழிக்கப் புறப்பட்ட ஃபிர்அவ்னிடமிருந்து வல்ல இறைவன் பாதுகாத்த நாளாகும்.
"ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.

மேற்கண்ட ஹதீஸில் இம்மாதத்தை அல்லாஹ்வின் மாதமாக நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் குறிப்பிடுகின்றார்கள். மட்டுமல்ல, முஹர்ரம் மாதம் 9 (தாசுஆ) மற்றும் 10 (ஆஷுரா) ஆகிய இரு தினங்களில் அனுசரிக்கப்படும் நோன்புகள் ரமலான் மாத நோன்புகளுக்கு அடுத்தபடியான சிறந்த நோன்புகளாக நபி (ஸல்) அவர்களால் இங்கு அடையாளப் படுத்தப்படுகிறது.

ஆஷூரா நோன்பைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு), "சென்ற வருடத்தின் பாவங்களுக்கு (அது)பரிகாரமாக அமையும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம்.

ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக விளங்கும் இந்த ஆஷூரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் 10ஆம் நாள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.


"மூஸா (அலை) அவர்களைப் பெருமைப் படுத்துவதற்கு யூதர்களைவிட நான் அதிகத் தகுதி வாய்ந்தவன்" எனக் கூறி அவ்வருடம் முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்ற நபி(ஸல்) அவர்கள், "எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" (அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.) எனக் கூறிச்சென்றார்கள்.

முஹர்ரம் மாதத்தின் படிப்பினை:

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்து முஹர்ரம் 10 அன்று மட்டும் நோன்பு வைத்திருந்தாலும் அவர்களின் எண்ணத்திற்கியைந்து 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பு வைக்கும் முஸ்லிம் சமூகம் அதன் பின்னணியில் உள்ள நபி(ஸல்) அவர்களின் உறுதியான சமுதாய சிந்தனையைக் குறித்து ஆழமாகச் சிந்திப்பதில்லை.

நபி(ஸல்) அவர்கள், "அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் 9 அன்றும் நோன்பு வைப்பேன்" என்று ஏன் கூறினார்கள்?

அதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் விரவிக் கிடக்கும் பல்வேறு நிகழ்வுகள் தெளிவான பதிலைத் தருகின்றன.

யூத சமுதாயம் என்பது, உலகில் பல சமூகங்களை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் எண்ணிக்கையை வைத்து மிகவும் அதிகமான நபிமார்களைப் பெற்றுக் கொண்ட சமுதாயமாகும். எனினும் தங்களுக்கு அனுப்பப்பட்ட பல நபிகளை நிராகரித்தது மட்டுமன்றி அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிகளுள் அதிமானோரைக் கொடூரமாகக் கொலையும் செய்தவர்கள் யூதர்களாவர். இதனால் இறைவனின் கடும் சினத்திற்குரியவர்களாகி இறைவனால் சபிக்கப்பட்ட கூட்டமாக, இறைவனின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கூட்டமாக அவர்கள் இருக்கின்றனர்.

இந்தக் காரணத்தினால் எப்பொழுதுமே தம்முடைய செயல்களில் எதுவும் யூதர்களுக்கு ஒப்பாக எவ்விஷயத்திலும் இருந்து விடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர்.

அதோடு தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும்படி வலியுறுத்தவும் செய்தனர். இதற்கு உதாரணமாகப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

அவற்றில் ஒன்றுதான் இந்த ஆஷூரா 9ஆம் நாள் நோன்பும். எவ்விஷயத்திலும் யூதர்களின் செயலுக்கு, தான் ஒப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நபி(ஸல்) அவர்கள் நன்மைகள் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் அவர்களைவிட மேலதிகமாக இருக்கும் முகமாக ஆஷூரா 9 அன்றும் நோன்பு வைக்க விழைந்தார்கள்.

இவ்வாறு தமது ஒவ்வொரு அசைவிலும் மாற்றாரின் கலாச்சாரத்தைப் பின்பற்றிவிடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் கவனமாக இருந்ததன் காரணம், இஸ்லாமியக் கலாச்சாரம் எவ்விதத்திலும் மற்ற கலாச்சாரங்களோடு ஒன்றி அழிந்து விடக்கூடாது; தனித்தன்மையும் திகழ வேண்டும் என்று கருதியேயாகும்.

ஆஷூராவின் சிறப்பு. 
“நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது “மூஸா(அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரி(பிர்அவ்ன்) இடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும்” என்று யூதர்கள் காரணம் கூறினர். “உங்களை விட மூஸா(அலை) அவர்களுக்கு நான்தான் அதிக உரிமை உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி, அன்று நோன்பு வைக்குமாறும் உத்தரவிட்டனர். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: புகாரி 3397, முஸ்லிம்.

இந்தக் கட்டளை மூலம் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்று தெரிந்திருந்தாலும் ஆஷுரா நோன்புக் கட்டாயக் கடமை அல்ல. காரணம் நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது – ரமழான் நோன்பு கடமையாக்கப்படாத நேரத்தில் – இந்த நோன்பைக் கடமையாக ஆக்கி இருந்தனர். ரமழான் நோன்புக் கடமையாக்கப்பட்டபின் ஆஷுரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை.
“நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டிருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின், “விரும்பியவர் இந்த ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும்! விரும்பாதவர் விட்டு விடலாம்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: புகாரி 1592, முஸ்லிம். இதே கருத்தை முஆவியா(ரழி) அவர்களும் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

“ஆஷுரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர்” என்று நபி(ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது, “அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: முஸ்லிம் 1916, 1917, அஹ்மத், அபூதாவூது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. நூல்: புகாரி 2006

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1976

நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977

மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளும், பத்தாம் நாளும், நோன்பு ஸுன்னத் என்பதை நாம் உணரலாம். இதுதான் ஆஷுரா நாளின் சிறப்பு.
கர்பலா

இற்றைக்கு1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சோக நிகழ்வு அது. நீதியும் அநீதியும் சத்தியமும் அசத்தியமும் மோதிக் கொண்ட நாள் அது.
மனச்சாட்சிகளை உருகவைக்கும் அந்த நிகழ்வுதான் கர்பலா நிகழ்வு. ஹிஜ்ரி 61ம் ஆண்டு அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பேரர் இமாம் ஹூசைன்(ரலி) அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பனீ உமையா கூட்டத்தினரால் கர்பலா எனும் பாலைவனத்தில் மிகபரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
நபியவர்களினதும், தோழர்களினதும் அளப்பெரிய தியாகங்களுக்கும் அயராத உழைப்பிற்கு மத்தியில்; வளர்த்தெடுக்கப்பட்ட புனித இஸ்லாம், உமையாக்களினால் மாசுபடுத்தப்பட்டது.
குர்ஆனின்; விளக்கங்களும் நபியவர்களின் சுன்னாவும் அக்கொடியவர்களின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் சாதகமாக வியாக்கியானம் செய்யப்பட்டன.
அநீதிகளும் அனாச்சாரங்களும் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றப்பட்டன. இஸ்லாமிய நல்லொழுக்கங்களும் அதன் பெருமான விழுமியங்களும் சிதைக்கப்பட்டு சீரழிக்கப்பட்டன. நபியவர்களின் மார்க்கம் அழிக்கப்படும் அந்த அபாயகர நிலையை கண்டு அதனைப்பாதுகாக்கும் முழுநோக்குடன் இமாம் ஹூசைன்(ரலி) அவர்கள் கர்பலா நோக்கி புறப்பட்டார்கள். அவர்கள் தனது பயனத்தின் நோக்கம் பற்றிக் கூறுகையில் “நான் சமூகத்தில் குளப்பத்தை ஏற்படுத்த இப்பயனத்தை மேற்கொள்ள வில்லை. எனது பாட்டனாரினது மார்க்கத்தில் சீர்திருத்தத்தை மேற்கொண்டு நன்மையை ஏவி தீமையைத்தடுக்கவே இதனை செய்கிறேன்” எனக் கூறினார்கள். நபியவர்களின் மார்க்கம் யஸீதினால் குளிதோன்றி புதைக்கப்படுவதை சகித்துக் கொள்ளாத இமாம் ஹூசைன் அவர்கள் தனது குடும்பத்தாருடனும் தனது போராட்டத்திற்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்த வாக்கு மீறாத தோழர்களுடனும் கர்பலாவுக்கு வருகை தந்து அநியாயக்காரர்களுடன் போராடி தனதுயிரையும் தனது குடும்பம் மற்றும் தோழர்களின் உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையிலே தியாகம் செய்தார்கள்.

நபி(ஸல்) அவர்களின் பேரப்பிள்ளையான ஹுஸைன் (ரலி) அவர்களின் மரணம் (கொலை) யஸீத் பின் முஆவியா என்பவரால் நடத்தப்படுகின்றது. யஸீத் பின் முஆவியா தனி மனிதராக நின்று இந்த காரியத்தில் ஈடுபடவில்லை. அந்ந சம்பவம் நடக்கும் போது சம்பவம் நடந்த கர்பலா பகுதியில் யஸீத் பின் முஆவியா என்பவரே ஆளுனராக இருந்தார். அவருடைய ஆளுமைப் பகுதிகளுக்கு எதிராகவும் அவரது அதிகாரத்துக்கு எதிராகவும் நடந்தேறிய குழப்பங்களிலேயே ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்படுகிறார்கள். (முஹர்ரம் மாதம் 10 நாள் இந்த சம்பவம் நடக்கின்றது)

நபி (ஸல்) அவர்களின் அன்புக்கும் அளவுகடந்த நேசத்துக்கும் உரிய பேரரான இமாம் ஹுஸைன் (அலை) அவர்களும், பெண்கள் சிறுவர்கள் அடங்கிய அவர்களது உறவினர்களும் உமையா ஆட்சியாளனான யசீதினால் கர்பலாத் திடலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, ஈட்டி முனையில் சிரசுகள் குத்தி உயர்த்தப்பட்டு ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோரமான நிகழ்வை எதிர்கொண்ட கசப்பான அனுபவம் இந்த முஹர்ரம் மாதத்துக்கு உண்டு.

வரலாற்றிலே ஒரு திருப்புமுனையாக அமைந்து, குறிப்பிட்டதொரு சகாப்தத்தையே உருவாக்கிய கர்பலா நிகழ்வில் பின்னிப் பிணைந்து காணப்படும் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் வாழ்க்கைத் தடங்கள் மிகுந்த அனுதாபத்திற்குரியனவாகும்.

இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், சிறந்த சிந்தனையுடையோராயும் துணிச்சல் மிக்கோராயும் துன்பங்களையும் ஆபத்துகளையும் எதிர்நோக்கும் வல்லமை பெற்றோராயும் விளங்கினார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உயிரையே இழக்க நேரிட்டாலும் அசைக்க முடியாத மனவுறுதியோடு எதையும் தாங்கும் மனத்திண்மை படைத்தோராய்த் திகழ்ந்தார்கள். இஸ்லாமியக் கொள்கைகளை, கோட்பாடுகளைக் காப்பாற்றிக் கொள்வதிலே அன்னார் காட்டிய வீரமும் மனவுறுதியும் சரியான தீர்மானங்களும் சிலாகிக்கத்தக்கவை.

வெறும் அரசியல் நோக்கிற்காக அல்லாமல், தூர்ந்து செல்லும் இஸ்லாமியத்தைப் பாதுகாக்கும் உயர் இலட்சியத்துடன் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், இந்நிகழ்வில் பங்கேற்றார்கள். ஆட்சியாளர்களை சீர்திருத்தம் செய்வதற்கு சமாதான முயற்சியைப் பயன்படுத்த முனைந்தார்கள். ஆனாலும், நிராயுதபாணியாக நின்ற அவர்களை, உமையாக்கள் கொடூரமாகக் கொன்றனர். தமது ஆட்சிக்கு எதிரான, அல்லது தமது ஆட்சியை விரும்பாத சக்திகளைக் களையும் உமையாக்களின் திட்டத்திற்கு இமாம் ஹுஸைனும் பலியாகிப் போனார்கள்.

ஹிஜ்ரத் 
கிபி 622 –ல் முஹ்ம்மது மக்காவிலிருந்து யஸ்ரிப் என்ற மதீனாவிற்கு புலம்பெயர்ந்தார். இதை ஹிஜ்ரத் என்றும், அன்றிலிருந்து புதிய சகாப்தத்துடன், இஸ்லாமியக் காலக்கணக்கு துவங்குவதாக கூறுவதையும் நாம் அறிவோம்.

ஹிஜ்ரத் என நாம் வழமையாக அழைக்கும் வரலாற்று உண்மைகள் முஸ்லிம் பொதுமக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமானவை. இறைதூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் ஒரு சிறு கூட்டத்தினர் மக்காவிலிருந்த தம் வீடுகளை விட்டு மதீனாவுக்குப் புலம் பெயரும் நிர்ப்பந்தத்திற்குட்பட்டனர். அக்கூட்டத்தினர் தம்மிடமிருந்த அனைத்து சொத்துக்களையும் விட்டுசென்றது, ஈமானை மட்டும் அது சுமந்து சென்றது, நபித்துவத்தின் பின்னர் 13 ம் வருடத்தில் இது நிகழ்ந்தது.

இப்பூவுலகில் முதன் முதலாக ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டவர் இறைதூதர் நபி இப்றாஹீம் (அலை) அவர்களே! அன்னார் தமது துணைவியார் ஸாராவுடன் "ஹர்ரான்" என்ற ஊரிலிருந்து "பாலஸ்தீனம்" சென்று அங்கு குடியேறினார்கள். இதுவே இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த முதல் ஹிஜ்ரத் எனக் கருதப்படுகிறது.

தாம் கொண்ட கொள்கையின் அடிப்படையில் அசைக்க முடியாத விசுவாசத்தோடு செயலாற்றுவதை வலியுறுத்தும் இஸ்லாம் எனும் இனிய மார்க்கத்தை காப்பதற்காக அந்த மார்க்கம் போதிக்கும் அறநெறிகளை தம்மில் நிலைநிறுத்தி தாமும் செயற்படுவதோடு, அவற்றைத் தரணியில் தழைக்கச் செய்வதற்காக நாடு துறப்பதையே ஹிஜ்ரத் என்ற பதம் விளக்கி நிற்கிறது.

இவ்வகையில் இறைவனுக்காக இறைதூதர் மீது கொண்டிருந்த தூய அன்பிற்காக இறைவனும் இறைதூதரும் ஈந்தளித்த ‘தீன்’ எனும் சன்மார்க்கத்திற்காக அன்றைய அரபகத்து முஸ்லிம்கள் தாம் பிறந்த புனித மக்கா நகரை மட்டுமல்ல தாம் பெற்ற மக்களை துறந்தார்கள். பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் துறந்தார்கள்.

இறைத்தூதரின் நாடு துறத்தல் என்ற ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டதுதான் முஸ்லிம்கள் பயன்படுத்தி வரும் ஹிஜ்ரி ஆண்டு. இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதுதான் இந்த ஹிஜ்ரத். பெருமானாரின் ஒவ்வொரு அசைவிலும் ஏராளமான பாடங்கள் உள்ளன. அது போல் பெருமானார் செய்த ஹிஜ்ரத்திலும் மனிதர்களுக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன.

இறைத்தூதரின் நாடு துறத்தல் என்ற ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டதுதான் முஸ்லிம்கள் பயன்படுத்தி வரும் ஹிஜ்ரி ஆண்டு. இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதுதான் இந்த ஹிஜ்ரத். பெருமானாரின் ஒவ்வொரு அசைவிலும் ஏராளமான பாடங்கள் உள்ளன. அது போல் பெருமானார் செய்த ஹிஜ்ரத்திலும் மனிதர்களுக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன.

யத்ரிப்(மதீனா)வுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு இறைவனின் கட்டளை வந்ததும் நான் இறைவனின் தூதர் எனவே புறப்படுகிறேன் என்று புறப்பட்டு விடவில்லை. திட்டம் இடாமலோ, தனித்தோ, யாருடைய உதவியையும் நாடாமலும் புறப்பட்டு விடவில்லை. முறையாகவும் செம்மையாகவும் திட்டமிட்டார்கள். மனிதர்களிடமிருந்து தேவையான உதவிகளையும் பெற்றார்கள்.

மனித மனதில் பல காட்சிகளை வரைய மூல ஊற்றாக அமைந்த, அமையும் இந்நிகழ்வு கவலையையும், மனவெழுச்சிகளையும் தூண்டும் பல நிகழ்வுகளாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் தௌர் குகை நிகழ்வு மிகுந்த மனவெழுச்சியைத் தூண்டக் கூடியது என்பதில் சந்தேகமில்லை. சிலந்தி குகை வாயிலில் வலைபின்னுகிறது. புறா அங்கே கூடு கட்டுகிறது. விரட்டுவோரை வழிதவறச் செய்யும் நிகழ்வுகளாக இவை அமைந்து விடுகின்றன. இறுதிமுடிவை தீர்மானிக்கும் அந்தச் சில நிமிடங்களின்போது இறைதூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களுக்கு அப்பிரமிக்கச் செய்யும் ஆச்சரியமான வார்த்தைகளைக் கூறுகிறார்:


நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் ஓர் திருப்பு முனையாக அமைந்துள்ளது போன்று, அவர்களின் வாழ்க்கை முறையும் மனித சமுதாயத்திற்கு ஒரு வழி காட்டலாக அமைந்திருப்பதை நாம் அறிந்திருந்தும் நமது வாழ்வை இஸ்லாமிய நெறிகளின் பால் செலுத்தி சீர்படும் எண்ணத்துடன் அதை வரவேற்பதில் தான் உண்மையான புத்தாண்டின் மகிழ்வு அமைந்திருக்கிறது. வல்ல நாயன் நல்லதோர் திருப்புமுனையை நமது வாழ்விலும் நல்கி, நலம் பல பெற அருள் புரிவானாக! ஆமீன்.

Friday, June 13, 2014

பராஅத் 2014
                 பராஅத் என்றால் நீங்குதல் - விலகுதல் என்று பொருள்.
இன்றைய தினம் மக்களில் பலருக்கு உயிர் ரிஜ்க் நீங்கி விடுதல் குறித்து அறிக்கை தயாரிக்கப்படுவதால் இன்றைய இரவுக்கு பராஅத்தின் இரவு என்று சொல்லப்படுகிறது.
அரபு வழக்கத்தில் ஷஃபான் நடு இரவு என்று சொல்லப்படுகிறது. ஹதீஸ்களிலும் இந்த வார்த்தை தான் காணப்படுகிறது.
இந்த இரவின் சிறப்பு என்ன? அதற்கான காரணம் யாது? இந்த இரவில் என்ன செய்ய வேண்டும் என்பவை இந்த ஐந்து ஹதீஸ்களில் சொல்லப்படுகிறது.
1. وعن عائشة قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله ؟ قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب رواه الترمذي وابن ماجه وزاد رزين ممن استحق النار وقال الترمذي سمعت محمدا يعني البخاري يضعف هذا الحديث .
2. وعن عائشة عن النبي صلى الله عليه وسلم قال هل تدرين ما هذه الليل ؟ يعني ليلة النصف من شعبان قالت ما فيها يا رسول الله فقال فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم . فقالت يا رسول الله ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى ؟ فقال ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى . ثلاثا . قلت ولا أنت يا رسول الله ؟ فوضع يده على هامته فقال ولا أنا إلا أن يتغمدني الله برحمته . يقولها ثلاث مرات . رواه البيهقي في الدعوات الكبير .
3 وعن أبي موسى الأشعري عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله تعالى ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن . رواه ابن ماجه .
4. ورواه أحمد عن عبد الله بن عمرو بن العاص وفي روايته إلا اثنين مشاحن وقاتل نفس .
( موضوع )
5. وعن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ؟ ألا مسترزق فأرزقه ؟ ألا مبتلى فأعافيه ؟ ألا كذا ألا كذا حتى يطلع الفجر . رواه ابن ماجه .
பராஅத் இரவு பற்றிய இந்த 5 ஹதீஸ்களும் மிஷ்காத்தில் பதிவு செய்யப்பட்ட்டுள்ளன.
இந்த 5 ஹதீஸ்களுமே லயீப் வகையை சார்ந்த்தாகும்.
லயீபான ஹதீஸ் என்றால் அது தள்ளப்பட வேண்டியது என்று பொருளல்ல.
ஹதீஸ் கலை பற்றிய போதிய ஆராய்ச்சியறிவு இல்லாத சிலர் இத்தகைய ஹதீஸ்களைப் பற்றிய அலர்ஜியை மக்களிடம் ஏற்படுத்திவிட்டனர்.
ஹதீஸ்களில் மவ்ளூஃ என்றொரு வகை ஹதீஸ் இருக்கிறது. அது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாகும். அது தான் தள்ளப்பட வேண்டியதாகும்.
லயீபான் ஹதீஸ் என்றால் அறிவிப்பாளரின் தரம் குறைவானது என்பதே பிரதான பொருளாகும்
ஒரு அறிவிப்பாளர் இளைமையாக இருக்கும் போது ஹதீஸின் அறிவிப்பில் ஒரு மாதிரி தகவலை தெரிவித்த பிறகு அவரே முதுமைப் பருவத்தில் அந்த அறிவிப்பை சற்று மாற்றிக் கூறீவிடுவாரெனில் அவருடை மனனத்திறன் குறைந்து விட்ட்து என்று கருதி அந்த ஹதீஸை லயீபானது என்று சொல்லி விடுவார்கள்.
இன்னும் சில சந்தர்ப்பங்களில் ஒரே பெயருடைய இருவரை ஒப்பாய்வு செய்கிற போது மற்றவரை விட இவர் பலம் குறைந்தவர் என்று சொல்வார்கள். இதனால் இரண்டாமவர் அறிவிக்கிற ஹதீஸ் லயீபானது என்று சொல்லப்படும்.
ஒரு உதாரணத்திற்கு முஸ்லிமில் ஒரு ஹதீஸ் வருகிறது. 2597
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ عَنْ عُمَرَ بْنِ حَمْزَةَ الْعُمَرِيِّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَعْدٍ قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُولُا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَشَرِّ النَّاسِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ الرَّجُلَ يُفْضِي إِلَى امْرَأَتِهِ وَتُفْضِي إِلَيْهِ ثُمَّ يَنْشُرُ سِرَّهَا
திருக்குர் ஆனுக்கு அடுத்த நூல்களில் இரண்டாம் தரத்தில் இருக்கிற ஸஹீஹ் முஸ்லிமில் இருக்கிற இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள உமர் பின் ஹம்ஸா வை பலகீனமானவர் என்று கூறப்படுகிறது.
காரணம் இன்னொரு உமர் பின் ஜைதை உயர்ந்தவர் என்று காட்டுவதற்காக!
في إسناده: عمر بن حمزة العمري وهو ضعيف. قال الذهبي في الميزان بعد أن ساق له هذا الحديث: هذا مما استُنكر لعمر .
وتعقب ابن القطان عبد الحق الإشبيلي في "بيان الوهم والإيهام"
وعمر بن حمزة ضعفه ابن معين، وقال: إنه أضعف من عمر بن محمد بن زيد، وهذا تفضيل لعمر بن محمد بن زيد عليه فإنه ثقة -أعني عمر بن محمد-، فهو في الحقيقة تفضيل أحد ثقتين على الآخر
இன்னும் ஒரு விச்யத்தை புரிந்து கொள்ள வேண்டும். அறிவிப்பாளர்கள் மூன்று தரத்தில் இருக்கிறார்கள்.
· அனைவராலும் பலமானவர் என்று ஏற்கப்பட்டவர்
· அனைவராலும் பலவீனமானவர் என்று கூறப்பட்டவர்
· பலவீனமானவர் பலமானவர் என்று இருவிதமாக விமர்சிக்கப்படுபவர்- கருத்து வேறுபாட்டுக்கு ஆளானவர்.
ஏராளமான அறிவிப்பாளர்கள் இந்த மூன்றாம் நிலையில் இருக்கிறார்கள். அவர்களுடைய ஹதீஸ்களை ஒரு தரப்பின் கருத்தை வைத்து ஒதுக்கி விட்டோம் என்றால் பெருமானாரின் பல செய்திகள் சமூகத்திற்கு கிடைக்காமல் போய்விடும், அதனால் தான் இமாம் அஹ்மது இமாம் நஸஈ போன்ற சில இமாம்கள் தங்களுடைய ஸஹீஹ் தொகுப்புக்களில் அத்தகையோருடைய ஹதீஸ்களுக்கும் இடமளித்தனர்.
الأول: متفق على جلالتهم وإتقانهم، أو على توثيقهم جمهور
الثاني: قسم متفق على ضعفهم، أو على تضعيفهم جمهور أئمة هذا الشأن
القسم الثالث: وهم الرواة المختلف فيهم،
ومما ينبغي أن يعلم في هذا الشأن أنه لا يصلح أن يطرح حديث الراوي أو يتوقف فيه، للاختلاف فيه، أو لإطلاق الكلام فيه، وإلا للزم تضعيف آلاف الأحاديث وردّها.
ولذا فقد ذهب عدد من المحدثين كأحمد في مسنده، والنسائي في سننه وغيرهما إلى أنه لا يترك حديث الرجل حتى يجمع الجميع على تركه .
மார்க்க சட்ட வல்லுனர்களின் கருத்து என்ன வென்றால் ஹதீஸ்களின் தரம் பற்றிய பேச்சில் ஹதீஸ்கலை குறித்த ஆழமான அறிவில்லாதவர்கள் ஈடுபடக் கூடாது.
فهذه قواعد مهمة في التصحيح والتضعيف يجب على من يتصدر للفنتيا أو الحكم على الأحاديث صحة وتضعيفا أن يعيها ويعرفها تمام المعرفة
இதை நீங்களும் நானும் புரிந்து கொள்வது சிரமமல்ல.
எந்த் ஒரு துறையிலும் போதிய விவரமில்லாமல் கருத்துச் சொல்வது அல்லது பரப்புவது நல்லது அல்ல- நாகரீகம் அல்ல- நியாயமல்ல - என்று அனைவரும் ஒத்துக்கொள்வர்,
ஆணால் முஸ்லிம் சமுதாயத்தில் ஏறபட்ட துரதிஷ்டம் ஹதீஸ் பற்றி ஆணா ஆவன்னா தெரியாதவர்கள் எல்லாம் ஸஹீஹ் லயீப் என்று பேசுவது தான். இதில் பெரும் கொடுமை இத்தகையோர் தர்கத்தில் ஈடுபடுவதாகும்
எத்தனை ஆயிரக்கணக்கான ஹதீஸ்கள் இருக்கிறதோ அவை முழுவதுமாக ஆராயப்பட்டு தரம் பிரிக்கப் பட்டு எது எது எந்த அளவில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டு, எது எதன் படி அமல் செய்யலாம் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்யப் பட்டு விட்டது
மார்க்கத்தில் புரட்சி என்ற பெயரில் தனக்குப் பின்னால் ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொள்ள ஆசைப்பட்டு சிலர் வேணுமென்றே அடிப்படை தெரியாத மக்களிடம் ஹதீஸ்களின் தரம் பற்றி பேசி குழப்பத்தை ஏறபடுத்தினர். மக்களிலும் பலர் எதார்த்த நிலையை புரிந்து கொள்ளாமல் – இது விசயத்தில் தங்களது ஆற்றலைப் பற்றி சிந்தித்துப் பார்க்காமல் – மார்க்கம் விச்யத்தில் தமது மனோ இச்சைப் படி பேச ஆரம்பித்து விட்டனர்.
இப்போது ஹதீஸ்களின் தரம் பற்றி அல்லது நம்முடைய நடைமுறைகளுக்கு ஸ்ஹீஹான ஹதீஸ் ஆதாரம் இருக்கிறதா என்பது பற்றி கேள்வி கேட்கிற சகோதரர்களை ஒரு கேள்வி கேட்கிறோம். உண்மையில் உங்களது நெஞசைத் தொட்டுச் சொல்லுங்கள் ஒரு வாத்த்திற்காகவே தவிர இது பற்றி கொஞ்சமாக நீங்கள் தெரிந்து கொள்ள முயற்சி செய்த்துண்டா?
உறுதியாகச் சொல்கிறோம். நீங்கள் ஹதீஸ்கலைப் பற்றி தெரிந்திருப்பீர்கள் எனில் லயீபான ஹதீஸ்கள என்று முகம் சுளிக்கமாட்டீர்கள்,
லயீபான ஹதீஸ் என்றால் ஸஹீஹான ஹதீஸுக்கு எதிராக தாக்குப் பிடிக்காது என்பது மட்டுமே உண்மையான பொருளாகும். அதாவது ஸஹீஹான ஒரு ஹதீஸ் ஒரு செய்தியை சொல்லுகிற போது அதற்கு எதிரான கருத்தை லயீபான ஹதீஸ் சொல்லுமானால் லயீபான ஹதீஸை ஏற்க முடியாது என்பதே சட்டமாகும்.
இது கூட இமாம்களின் இஜ்திஹாதில் தலையீடு செய்யாது. ஏனெனில் இமாம்களின் கால கட்ட்த்திற்கு பின்பு தான் அறிவிப்பாளர்களில் பிரச்சினையும் ஆய்வும் வெளிப்படத் தொடங்கியது.
உதாரணத்திற்கு இமாம் அபூஹனீபா ஹிஜ்ரி 80 ல் பிறந்து 150 ல் வபாத்தானார்.
முதன் முதலாக ஸஹீஹ் திரட்டை வழங்கிய இமாம் புஹாரி - தனது பணியை ஹிஜ்ரி 217 ல் துவக்கினார்.
சுமார் 70 வருடங்களுக்குப் பிறகு நடக்கிற சர்ச்சை அதற்கு முந்தைய காலகட்ட்த்தவரின் ஆய்வை பாதிக்காது என்பது வெள்ளிடை மலை போல தெளிவாகிற விசயமல்லவா?
உண்மையில் ஹதீஸ் லயீப் என்று சொல்லி சமூகத்தை ஹைஜாக் செய்கிறவர்கள். அவர்களுக்கு சான்றாக காட்டுகிற ஹதீஸ்களை துழாவிப் பார்த்தார்களானால் அதிலும் கூட லயீப் என்று ஒருவரால் கூட விமர்ச்சிக்கப் படாதவர்களை பார்க்க இயலாது.
சில நேரத்தில் ஒரு துறையில் லயீபானவராக கருதப் படுகிறவர் இன்னொரு துறையில் பலமானவராக கருதப்படுவார்.
قد يحتج بالراوي في جانب من جوانب العلم دون الآخر كالاحتجاج به في المغازي أو القراءات ونحوها دون الحديث.
قال ابن معين في زياد بن عبدالله البكائي:
"لا بأس به في المغازي، وأما في غيره فلا".
وقال صالح جزرة:
"هو على ضعفه أثبتهم في المغازي" .

இன்றைய சமூகத்தில் பலரும் மவ்ளூஐயும் லயீபையும் ஒரே தரத்தில் வைத்துப் பேசுகிறார்கள். அது நபி மொழிகளுக்கு செய்கிற மாபெரும் அநீதியாகும்.
பெருமானார் விசயத்தில் அவர்கள் சொல்லாத்தை இட்டுக் கட்டிச் சொல்வது எவ்வளவு பெரிய குற்றமோ அதே போன்றதொரு குற்றம் தான் அவர்களது ஹதீஸை மறுப்பதுமாகும்.
லயீபான் ஹதீஸ் மறுக்கப்படக் கூடியதல்ல. லயீப் என்ற வார்த்தையாடலில் சமூகத்தை விமர்சிக்கிற எந்த ஒரு பேச்சும் இத்தகைய தண்டனைக்குரியதே!
உண்மையில் முஸ்லிம் உம்மத்தின் வரலாறு ஸஹீஹையும் லயீபையும் எப்படி எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சியாகும்.
ஸஹீஹை சுன்னத்தாகவும் வலியுறுத்தப் பட்டதாகும் கருதுகிற முஸ்லிம்களின் வரலாறு லயீபை கட்டாயப்படுத்தப் பட்ட அம்சமாக கருதாமல் அமல் செய்வதற்கான தூண்டுதலாகவே எடுத்துக் கொண்டுள்ளது.
எனவே முஸ்லிம்கள் ஒரு காரியத்தை தலைமுறை தலைமுறையாக மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முறைப்படி செய்து வருவார்களானால் அதுவே ஹதிஸை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான சாட்சியாகும்.
இவ்வாறு மார்க்கத்தைப் புரிவது வதுதான் சரியான மார்க்கத்தின் கடைபிடிப்பதற்கான வழியாகும்.
அந்த வகையில் பராஅத் இரவிற்கான செய்தியை கூறும் ஹதீஸ்கள் லயீபானதாக இருந்தாலும் . அந்த இரவின் சிறப்பை வலியுறுத்தும் செய்தி பல தரப்பில் வந்திருப்பதால் அது ஸஹீஹின் தரம் பெற்றதாக கருதப் படுகிறது.
மட்டுமல்ல லயீபான் ஹதீஸ் அமல் செய்வதற்கு ஏற்றதே
لكن يعمل بالحديث الضعيف في فضائل الأعمال باتفاق العلماء ،
இந்த இரவை மகிமைப் படுத்தும் பழக்கம் சஹாபாக்கள் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதை வரலாறு காட்டு கிறது.
மிஷ்காத் ஹதீஸ் எண் 1308. விரிவுரையில் அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) அவர்கள் தனது மிர்காதில் எழுதுவதாவது. ஹழ்ரத் உமர பின் கத்தாப் ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் முதலான நாயகத் தோழர்கள் (ரலியல்லாஹு அன்ஹும்) அதிகமானோரும் பின் வரும் துஆவை ஓதி வந்தார்கள்
وعن كثير من السلف ، كعمر بن الخطاب ، وابن مسعود وغيرهما ، أنهم كانوا يدعون بهذا الدعاء : اللهم إن كنت كتبتنا أشقياء فامحه واكتبنا سعداء ، وإن كنت كتبتنا سعداء فأثبتنا ، فإنك تمحو ما تشاء وتثبت وعندك أم الكتاب
(யா அல்லாஹ்! நீ எங்களை அபாக்கியவான்களாக பதிவு செய்து இருந்தால் அதை அழித்து எங்களை பாக்கியவான்களாக எழுது. நீ எங்களைப் பாக்கியவான்களாக எழுதி இருந்தால் அதை அப்படியே உறுதிப்படுத்து ஏனெனில் நீ நாடுவதை அழிப்பாய் (நாடுவதை) உருதிப்படுத்துவாய் உன்னிடம் மூலநூல் உள்ளது).
இந்த துஆவை ஷாஅபான் 15 ஆவது (பராஅத்) இரவில் ஓதியதாக ஹதீஸில் வந்துள்ளது. (மிர்காத்)
عن ابن مسعود رضي الله عنه أنه كان يدعو بهذا الدعاء أيضا
முல்லா அலி காரி ரஹ் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் ஹதீஸ் விரிவுரையில் இவ்வாறு கருத்துக்களை பதிவு செய்கிறார்
وعن عائشة رضي الله عنها ، عن النبي صلى الله عليه وسلم ، قال : " هل تدرين ما هذه الليلة ؟ " يعني ليلة النصف من شعبان ، قالت : ما فيها يا رسول الله ؟ فقال : " فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة ، وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة ، وفيها ترفع أعمالهم ، وفيها تنزل أرزاقهم " ، فقالت : يا رسول الله ! ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى ؟ فقال : " ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى ثلاثا . قلت : ولا أنت يا رسول الله ؟ ! فوضع يده على هامته ، فقال : " ولا أنا ، إلا أن يتغمدني الله منه برحمته " يقولها ثلاث مرات . رواه البيهقي في " الدعوات الكبير " .
இந்த இரவின் முக்கியத்தை சமுதாயத்திற்கு உணர்ந்த்துவதற்காக பெருமானார் கேள்வியெழுப்பி பதில் கூறியுள்ளார்கள். துஆ வாலும் வணக்கங்கங்களாலும் சிந்தனையாலும் திக்ராலும் இந்த இரவை உயிர்ப்பிக்க வேண்டும் – இப்னு ஹஜர் (ரஹ்)
قال ابن حجر
: نبه - عليه الصلاة والسلام - بهذا الاستفهام التقريري على عظم خطر هذه الليلة وما يقع فيها ، ليحمل ذلك الأمة بأبلغ وجه ، وآكده على إحيائها بالعبادة والدعاء والفكر والذكر ،
இந்த இரவில் என்ன நடக்கிறது?
லவ்ஹுல் மஹ்பூழில் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள விதிப்படியான தகவல்களில் அந்த வருட்த்திற்குண்டானதை பிரதி எடுக்கப்படுகிறது அது லைலத்துல் கத்ர் இரவில் மலக்குகளில் தரப்படுகிறது என ஹதீஸ் விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
இறப்பு பிறப்பு வாழ்வாதாரம் உள்ளிட்ட எல்லா காரியங்களின் தீர்ப்புகள் பராஅத் இரவில் எழுதப்பட்டு லைலதுல் கத்ருடைய இரவில் அதை மலக்குகளிடம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.
قال الطيبي : هو من قوله تعالى : ( فيها يفرق كل أمر حكيم ) من أرزاق العباد وآجالهم ، وجميع أمورهم إلى الأخرى القابلة
( وفيها ترفع أعمالهم ) ، أي : تكتب الأعمال الصالحة التي ترفع في هذه السنة يوما فيوما
: يعني كتابة ثانية بعد الكتابة في اللوح المحفوظ
وفيها تنزل أرزاقهم ) ، أي : أسباب أرزاقهم أو تقديرها ، وهو يشمل حسيها ومعنويها .
قال ابن حجر : يحتمل أن المراد تنزيل علم مقاديرها للموكلين بها ، أو أسبابها كالمطر بأن ينزل إلى سماء الدنيا ، أو من سماء الدنيا إلى السحاب الذي بينها وبين الأرض ،
يفرق فيها كل أمر حكيم ஆய்த்திற்கான விளக்கத்தில் தீர்வு. அது லைலத்துல் கத்ர் தான். எனினும் பராஅத் இரவிலும் பங்கீடு நடைபெறுவதாக ஹதீஸ்கள் சொல்கின்றன (மிர்காத்)
أن الليلة التي يفرق فيها كل أمر حكيم في الآية هي ليلة القدر لا ليلة النصف من شعبان ، ولا نزاع في أن ليلة نصف شعبان يقع فيها فرق ، كما صرح به الحديث ، وإنما النزاع في أنها المرادة من الآية ، والصواب أنها ليست مرادة منها ، وحينئذ يستفاد من الحديث والآية وقوع ذلك الفرق في كل من الليلتين إعلاما بمزيد شرفهما اهـ .
நிர்ணயங்கள் நடைபெறுகின்ற இந்த கருணை மிக்க அல்லாஹ் மக்களின் கோரிக்கையின் பால் அருட்கண் கொண்டு பார்க்கிறான். எல்லோருக்கும் மன்னிக்க தயாராகிறான்.
إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب رواه الترمذي
وعن أبي موسى الأشعري رضي الله عنه ، عن رسول الله صلى الله عليه وسلم ، قال : " إن الله تعالى ليطلع في ليلة النصف من شعبان ، فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن " . رواه ابن ماجه
1308 –
وعن علي رضي الله عنه ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا كانت ليلة النصف من شعبان ، فقوموا ليلها ، وصوموا يومها ، فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ، فيقول : ألا من مستغفر فأغفر له ؟ ألا مسترزق فأرزقه ؟ ألا مبتلى فأعافيه ؟ ألا كذا ألا كذا ؟ حتى يطلع الفجر " . رواه ابن ماجه
அதனால் நாம் என்ன செய்ய வேண்டும், அல்லாஹ்வின்
கருணை வெளிப்படுகிற இரவில் அவனிடம் கையேந்துவோம். துஆ செய்வோம்
இன்று மஃரிபுக்கு நாம் ஒதுகிற யாசீன்கள் நமக்காக!
திக்ரி தஸ்பீஹ் நபில் தொழுகைகளில் ஈடுபடுவோம்.
பெருமானார் (ஸல்) அல்லாஹ்வின் அருளிரங்கும் நாளில் தன்னுடைய உள்ளம் கவர்ந்த சஹாபாக்களுக்காக பிரார்த்திக்க ஜன்னத்துல் பகீஃற்கு சென்றார்கள், நாமும் அப்படிச் செல்வோம்.
அத்தோடு நம்முடைய உண்மையான வீடு இதுதான் என்பதையும் நினைவு படுத்திக் கொள்வோம். ஜியாரத்தின் நோக்கத்தை பெருமானார் (ஸல்) நமக்கு அப்படி சொல்லிக் கொடுத்தார்கள்.



கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி